March

மார்ச் 11

மார்ச் 11 …… தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன். மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்? மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும் என நீதிமொழிகள் 29:25ல் காண்கிறோம். அதே வசனம் கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான் என்றும் கூறுகிறது. மனிதருடைய சூழ்ச்சிகளில் சிக்கிவிடுவோமோ என்று பயப்படுவோருக்கு இந்த வசனம் சிறந்த ஆறுதலாக உள்ளது. எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான் (நீதி.1:35). சடுதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ…

March

மார்ச் 10

மார்ச் 10 சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள் (மத்.5:9). தேவனிடத்தில் சமாதானம் பெற்றவர்களாகிய நாம்,தேவனோடு இணைக்கப்பட்ட நாம், ஆண்டவர் இயேசுவின் கட்டளைப்படி சமாதானம்பண்ணுகிறவர்களாகவும் இருக்க வேண்டும். சமாதானம் பண்ணுகிறவர்களாக இருப்பதற்கு அநேக கஷ்டங்களைஅனுபவிக்க வேண்டும். முயற்சி எடுக்கவேண்டும். இதற்கு மனமாற்றம் பெற்ற வாழ்வு, திடமானநல்ல பண்பு, சுயவெறுப்பு இம்மூன்றும் தேவை. சமாதானம் என்பது எளிதானதல்ல. வேறுபாடுஅக்கறையின்மை, கவலையீனம் இவற்றால் இதை அடையவே முடியாது. சமாதானத்தைப் பெறுவதற்கு,மலையின்மீது ஏறுவதற்கு ஒப்பாக பாடுபடவேண்டும். ஏனெனில், அவற்றில்…

March

மார்ச் 9

மார்ச் 9 ….. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடார் (1.கொரி.10:13). வேதப் புத்தகத்திலுள்ள தெரிந்தெடுக்கப்பட்டவாக்குத்தத்தங்களில் புயலில் சிக்கித் தவித்து தேலர்வி மேற்கொண்டு விடுவோமோ எனக்கலங்கித் தவிக்காதவர்கள் யாரோனும் உண்டா? இந்த அனுபவத்திற்குப் பின்பு விடுதலை பெற்றுதேவனைத் துதிப்போம். அவரது வல்லமையைக் குறித்தும், கிருபையைக் குறித்தும்சந்தேகப்படாமல் இருக்கும்போது ஆழ்ந்த சோதனைகள் வரும். இந்த முறை அவர் தமது கிரியையைவிலக்கிக்கொண்டாரோ அல்லது நாம் அவரது கிருபைக்குப் பாத்திரரல்லவோ என்று பலவாறுசந்தேகப்படுவது இயல்பு. இப்படிப்பட்ட…

March

மார்ச் 8

மார்ச் 8 அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ கொஞ்சம் கிடைத்தது (ஆகாய் 1:9) பாபிலோனின் சிறையிலிருந்து தப்பிய சிறுபான்மை மக்கள் யூதேயாவில் இக்கட்டுகளின் நடுவே வசித்து வந்தனர். அவர்களுக்கு வருவாய் குறையாக இருந்ததோடன்றி கொடிய எதிரிகள் எப்பக்கத்திலிருந்தும் நெருக்கினர். ஆகவே பதினாறு வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த தேவாலயம் கட்டும் வேலையை விட்டுவிட்டனர். தங்கள் வீடுகளைக் கட்டுவதிலேயே அவசரம் கொண்டு, மச்சுப் பாவப்பட்ட அலங்காரமான வீடுகளைக் கட்டத் தொடங்கினர். தன்னலத்தை முதலாவதாகவும், தேவனை இரண்டாவதாகவும் வைத்து செயல்ப்பட்டு…

March

மார்ச் 7

மார்ச் 7 சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரே, உமக்காகக் காத்திருக்கிறவர்கள் உன்னிமித்தம் வெட்கப்பட்டுப் போகாதிருப்பார்களாக (சங்.69:6). தனக்காக ஒருவனும் வாழ்கிறதில்லை. நாம் செய்யும்நன்மை தீமைகளைப் பிறர் காண்கின்றனர். நமக்குத் தெரியாமல் அவர்கள் நமது வார்த்தைகளையும்,செயல்களையும் கூர்ந்து நோக்குகின்றனர். நாம் தேவனிடமிருந்து விலகும்போது மற்றவர்களும்பின்வாங்கிச் செல்வதற்கு ஒரு காரணமாக அமைகிறோம். அதாவது பிறருடைய பலமுள்ள சந்தோஷமான வாழ்விற்குநம்முடைய விசுவாசமே சிறந்த கருவி எனலாம். விசுவாசம் உபத்திரவத்தினாலும்,பொறுமையினாலும் சோதனைகளாலும், நம்பிக்கையினாலும் பலப்படுத்தப்பட்டு வளர்ச்சியடைந்து(ரோ.5:3-5) நாம் தேவனோடு கஷ்டங்களையும், தடைகளையும் மீறி முன்னேறிச்…

March

மார்ச் 6

மார்ச் 6 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரார் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிரு….. (சங்.1:1-2) தேவனுக்குள் ஆழ்ந்து வேரூன்றி நிற்கும் இருதயத்தில் தோன்றும் ஆவியின் கனிகளைப்பற்றி நாம் கலாத்தியர் 5:22ல் காண்கிறோம். அது பருவ காலத்தில் தோன்றும் கனி. அதாவது நமக்கு எப்பொழுது தேவையோ அப்பொழுது கிடைக்கும் கனிகள். விரோதம் அதிகரிக்கும்போது அன்பும், இருதயத்தைத் துன்பத்தின் நிழல் மறைக்கும்போது சந்தோஷமும், குழப்பமும் நிறைந்த வேளையில் சமாதானமும், பொறுமை பலவீனப்படும் நேரத்தில்…

March

மார்ச் 5

மார்ச் 5 உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர் (1.தெச.5:24) இன்றும் தேவன் நம்மோடு பேசுகிறவராயிருக்கிறார் என்பதை நாம் நம்புகிறோமா? ஆபிரகாம் போன்ற மனிதர்களிடமும், தாவீது போன்ற இராஜாக்களிடமும், ஏசாயா போன்ற தீர்க்கதரிசிகளிடமும், பேதுரு, பவுல் போன்ற அப்போஸ்தலரிடமும் தேவன் பேசினார். ஆனால் இன்று அவர் தம்முiடைய பிள்ளைகளை அழைத்துப் பேசுகிறாரா? ஆம், அவர் அகஸ்டின், மார்ட்டின் லுத்தர், வில்லியம் கேரி, கட்சன் டெய்லர் போன்றவர்களை அழைத்தார். அன்று அவர் பேசியது போன்று இன்றும் இவரால் மீட்கப்பட்ட தன் பிள்ளைகளாகிய…

March

மார்ச் 4

மார்ச் 4 … நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு…. இதோ ஆயியின் ராஜா வையும்…. உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன் (யோசு.8:1) ஒரு தடவை தோல்வியடைந்துவிட்டால் எல்லாம்முடிந்துவிட்டது என எண்ணுவது தவறு. பாவங்கள் மன்னிக்கப்படும். வீழ்ச்சிகள் மறையும்.தோல்விகள் மகிழ்ச்சியாக மாறும். நீதிமொழிகள் 28:13ல் தன் பாவங்களை மறைக்கிறவன்வாழ்வடையமாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் எனக்கூறப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டில் 1.யோவான் 1:9ல் நம்முடையபாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும்நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர்…

March

மார்ச் 3

மார்ச் 3 துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆறுதலடைவார்கள் (மத்.5:4) நாம் வியாதியாகவோ, கவலையாகவோ இருக்கும்போது நம்முடைய நண்பர்களின் ஜெபங்களினால் ஆறுதலும் உற்சாகமும் அடைவதுண்டு. நான் ஜெபிக்க முடியாதபடி பலவீனனாக இருந்தேன். தியானிக்க இயலாதபடி நோய்வாய்ப்பட்டிருந்தேன். அப்பொழுது எனக்காக அங்குள்ள மருத்துவ தாதிமார் ஜெபித்தனர். அதனால் நான் புதுப்பெலன் அடைந்தேன். நம்முடைய பெலவீனங்களை உணர்ந்து, நமக்காகப் பாரப்பட்டு ஜெபிக்கும் ஆண்டவர் பரலோகத்தில் இருக்கிறார். அவர் நம்மைப் பார்த்து பரிதாபப்படுகிறார் என்பதைக் கேள்விப்படும்போது எவ்வளவு ஆறுதலாய் இருக்கிறது! நாம் படும்…

March

மார்ச் 2

மார்ச் 2 ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள். பரலோகராஜ்யம் அவர்களுடையது (மத்.5:3). தரித்திரர் எப்போதும்; உங்களிடத்தில் இருக்கிறார்கள்….நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யலாம் என்று இயேசு கூறினார். ஏனெனில், அவர் அவர்களுக்காகமனதுருகுகிறவர். இங்குப் பணம், பொருள் இவற்றில்தரித்திரராயிருக்கிறவர்களை இயேசு குறிப்பிடாமல் ஆவியில் தரித்திரரைக் குறிப்பிடுகிறார்.யாக்கோபு இதையே, தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும்தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச்சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா? எனக் கேட்கிறார் (யாக்.2:5). தேவகிருபையும், மனுஷர் தயவும் தேவை என்ற உணர்வுடன்,இரட்சகர் இல்லாமல் தான் ஒன்றுமில்லை என்கிற அறிவும்…