ஓகஸ்ட் 5
ஓகஸ்ட் 5 தேவனே நியாயாதிபதி. ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார் (சங்.75:7). ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக் காரியத்தைச் சிந்திப்பானேன்? என்று கேட்ட சங்கீதக்காரன் பதிலையும் கண்டுகொண்டு, கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம் பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியில் ராஜா க்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணினர் (சங்.2:1-2) என்று கூறியுள்ளான். உன்னதமானவருடைய ஆளுகையைக் குறித்து அவர்கள் அறியவில்லை. இதையே சங்கீதம் 103:19 கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபிக்கிறார். அவருடைய ராஜரீகம் சர்வத்தையும் ஆளுகிறது எனக்…