ஓகஸ்ட் 3 சப்பாணிகளும் கொள்ளையாடுவார்கள் (ஏசா.33:23). உடலில் குறைபாடுள்ள ஒரு சிலர்தான், சதா அதையே நினைத்து கவலைப்பட்டு, வேதனையில் ஆழ்ந்துவிடுகின்றனர். இதனால் மனச்சோர்வும், பயமும் வளர்ந்து அவர்களுடைய வாழ்வைக் கசப்பு நிறைந்ததாக மாற்றிவிடுகிறது. வாழ்வில் விரக்தியும், சோர்வும் கண்ட இவர்களுக்கு உன்னதமான தேவன் ஊக்கமாகக் கூறுகிறார். தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள். இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். அவர்…