மார்ச் 31
மார்ச் 31 பயப்படாதிருங்கள். நான் தேவனா? (ஆதி.50:19) பிறர் குற்றங்களை மன்னிருக்கிற நாம் அக்குற்றங்களை மறந்துவிடவேண்டியது அவசியம். பழிவாங்கும் எண்ணத்தை மக்கள் ஒரு குறிப்பிட்ட காலம்வரை மனத்திற்குள் அடக்கி வைத்திருப்பது இயல்பு. அதுபோன்று யோசேப்பும் தங்கள் தகப்பன் மரிக்கும்வரையில் பழிவாங்கும் எண்ணத்தை அடக்கிவைத்துக் கொண்டிருப்பான் என அவனது தமையன்மார் கருதினர். இப்பொழுதோ அவர்களது அன்பான தகப்பன் யாக்கோபு மரித்துவிட்டான். வேதனையடைந்த யோசேப்பு நினைத்திருந்தால் அவர்களைப் பழிவாங்கமுடியும். அனால் அவன் அப்படிப்பட்டவனல்ல. பயந்து நடுங்கிக்கொண்டிருந்த அவர்களை நோக்கி யோசேப்பு,…