மே 31
மே 31 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில்……. தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங்.1:1-2). பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன் என்று (3.யோ.2) யோவான் தன் நிருபத்தை வாசிக்கிறவர்களுக்கென ஜெபிப்பதைக் காணலாம். இப்படியான அன்பும் நறுமணமும், நிறைவுள்ள கனிகளை எங்கே பெறலாம்? நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரத்திற்கொப்பான இருதயத்தில், துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாதபடி மனுஷரிடத்தில் பெறலாம். இதையே எரேமியா 17:5-6…