March

மார்ச் 7

மார்ச் 7

சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரே, உமக்காகக் காத்திருக்கிறவர்கள் உன்னிமித்தம் வெட்கப்பட்டுப் போகாதிருப்பார்களாக (சங்.69:6).

தனக்காக ஒருவனும் வாழ்கிறதில்லை. நாம் செய்யும்நன்மை தீமைகளைப் பிறர் காண்கின்றனர். நமக்குத் தெரியாமல் அவர்கள் நமது வார்த்தைகளையும்,செயல்களையும் கூர்ந்து நோக்குகின்றனர். நாம் தேவனிடமிருந்து விலகும்போது மற்றவர்களும்பின்வாங்கிச் செல்வதற்கு ஒரு காரணமாக அமைகிறோம்.

அதாவது பிறருடைய பலமுள்ள சந்தோஷமான வாழ்விற்குநம்முடைய விசுவாசமே சிறந்த கருவி எனலாம். விசுவாசம் உபத்திரவத்தினாலும்,பொறுமையினாலும் சோதனைகளாலும், நம்பிக்கையினாலும் பலப்படுத்தப்பட்டு வளர்ச்சியடைந்து(ரோ.5:3-5) நாம் தேவனோடு கஷ்டங்களையும், தடைகளையும் மீறி முன்னேறிச் செல்வதைப்பிறர் காணும்போது, அவர்களும் தேவனிடம் காத்திருந்து முன்னேறிச் செல்லவேண்டும் என்றுஊக்கத்தினையும், உற்சாகத்தினையும் பெறுவர் என்பது உறுதி. சர்வ வல்லமையுள்ள தேவன் நம்மைக்காத்து, உதவி செய்கிறார் என்பதைக் காணும் அவர்களும் நம்மைப்போல அவரில் விசுவாசம்வைக்கும்போது வெட்கப்படுவதில்லை என்று தெளிவாக உணருவர்.

அன்றாடக வாழ்வில் நாம் தேவனோடு சேர்ந்து செல்லவேண்டும். அப்பொழுதுதான் நமது சொல்லும், செயலும் அவரால் கொடுக்கப்படும். இதனால் நாம்பிறர் இடறலடைவதற்குரிய தடையாக இருக்கமாட்டோம். அவர்களும் தேவனுக்குக் கீழ்ப்படிந்துஅமைதியோடும், உறுதியோடும், நிச்சயத்தோடும் முன்னேறுவார்கள். கர்த்தருக்குக்காத்திருக்கிற அவர்களும் வெட்கப்பட்டுப் போகாதிருப்பார்கள் என்பது உறுதி.