மெய்யான பலி
2023 அக்டோபர் 11 (வேத பகுதி: 1 சாமுவேல் 15,21) “ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுகிறதற்காக, கொள்ளையிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான்” (வசனம் 21). “சாக்குப்போக்குகள் திறமையற்றவர்களின் கருவிகள்; இவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்கள் நீண்டதூரம் பயணிப்பது அரிது” என ஒரு பழமொழி கூறுகிறது. மனிதர்களாகிய நாம் பல நேரங்களில் சாக்குப்போக்கு சொல்வதில் நல்ல திறமையுள்ளவர்களாக இருக்கிறோம். சவுலும் இதற்கு விதிவிலக்கானவன் அல்லன். தன்னுடைய குற்றத்தை மறைக்க, ஏவாளை நோக்கிக் கையை…