October

கொஞ்சத்தில் உண்மை

2023 அக்டோபர் 21 (வேத பகுதி: 1 சாமுவேல் 16:10-13) “இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்” (வச. 11). சாமுவேலுக்கு முன்பாக தாவீதின் சகோதரர்களின் அணிவகுப்பு மிகவும் சுவாரசியமாக இருந்திருக்கும். சவுல் தனது அற்புதமான உடலமைப்பிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் போல நாமும் அடுத்த ராஜவாகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம். இந்த ஏழு பேரில் யாராவது ஒருவர் நிச்சயமாகவே சாமுவேலின் கண்களைக் கவருவர் என்று ஈசாய் நம்பிக்கையோடு இருந்திருக்கலாம். ஆனால் கர்த்தருடைய…

October

கர்த்தருக்கேற்ற இருதயம்

2023 அக்டோபர் 20 (வேதபகுதி: 1 சாமுவேல் 16:4-9) “நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்” (வச. 7). முதலில் மக்கள் தங்களுக்கான ராஜாவாவைத் தெரிந்தெடுத்தார்கள். மக்களுடைய விருப்பம் எல்லாம் எதிரியோடு போரிட வேண்டும், நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்பதாகவே இருந்தது. இவர்களுடைய பார்வையில் சவுல் பொருத்தமானவராக இருந்தான். ஆனால் இவனிடத்தில் ஆவிக்குரிய குணாதிசயம் சிறிதளவும் இல்லை. இவன் ஆவிக்குரிய காரியங்களுக்கு எவ்விதத்திலும் முன்னுரிமை…

October

பயம் நீங்குதல்

2023 அக்டோபர் 19 (வேத பகுதி: 1 சாமுவேல் 16:2 முதல் 3 வரை) “அப்பொழுது நீ செய்யவேண்டியதை நான் உனக்கு அறிவிப்பேன்; நான் உனக்குச் சொல்லுகிறவனை எனக்காக அபிஷேகம்பண்ணுவாயாக என்றார்” (வசனம் 3). சவுல் இருக்கும்போது பெத்லகேமில் போய் நான் காண்பிக்கும் மனிதனை ராஜாவாக அபிஷேகம் செய்யச் சொன்ன காரியத்தால் சாமுவேல் பயந்துவிட்டான். ஏனெனில் சவுல் எப்படிப்பட்ட மனிதன் என்பதை அறிந்திருந்தான். மேலும் இதுவரைக்கும் ஜெபித்தும், அவனுடைய குணப்படாத இருதயத்தைக் கண்டு சாமுவேல் பயந்திருக்கலாம். ஆனால்…

October

மாற்றத்திற்கான காலம்

2023 அக்டோபர் 18 (வேத பகுதி: 1 சாமுவேல் 16,1) “கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்” (வசனம் 1). சாமுவேலைத் தேடி சவுல் ஒருபோதும் வரவில்லை, சாமுவேலின் துக்கம் நீடித்தது. ஆனால் கர்த்தர் சாமுவேலைத் தேடி வந்தார். அவனுடைய துக்கத்துக்கு முடிவுண்டாக்க விரும்பினார். “நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்” (வசனம் 1) என்று அவர் பேசி, இந்த வயதான தீர்க்கதரிசியின் துக்கத்தை…

October

ஆவிக்குரிய மனஸ்தாபம்

2023 அக்டோபர் 17 (வேத பகுதி: 1 சாமுவேல் 15,32 முதல் 35 வரை) “இஸ்ரவேலின்மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம், சாமுவேல் சவுலுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்” (வசனம் 35). அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் (வசனம் 32) என்று சாமுவேல் கூறினான். கர்த்தருடைய கட்டளைக்கு சவுல் முழுமையாகக் கீழ்ப்படியவில்லை. ஆகையால் சாமுவேல் அதை நிறைவேற்ற முன்வந்தான். அமலேக்கியர் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்பது கர்த்தருடைய சித்தம். சவுல் அதை நிறைவேற்றவில்லை என்பதற்காக கர்த்தருடைய கட்டளை இல்லாமல்…

October

ஆவிக்குரிய நிதானம்

2023 அக்டோபர் 16 (வேத பகுதி: 1 சாமுவேல் 15,29 முதல் 31 வரை) “இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான்” (வசனம் 29). இந்த இக்கட்டான தருணத்தில் சாமுவேல் கர்த்தருக்குக் கொடுத்த அடைமொழிப் பெயர் இஸ்ரவேலின் ஜெயபலமானவர் (இஸ்ரவேலின் ஆற்றலானவர்). கர்த்தர் என்னைத்தான் அபிஷேகம் பண்ணியிருக்கிறார், நான்தான் இஸ்ரவேல் நாட்டிற்கு அரசன், நான் தான் இந்த நாட்டுக்குப் பாதுகாவலன், நான் என்ன…

October

போராடுதல்

2023 அக்டோபர் 15 (வேத பகுதி: 1 சாமுவேல் 15,26 முதல் 28 வரை) “சாமுவேல் சவுலைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தீர்; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, கர்த்தர் உம்மையும் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்” (வசனம் 26). கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தால் என்ன நடக்கும் என்பதற்கு சவுல் நாம் பின்பற்றக்கூடாத உதாரணமாயிருக்கிறான். எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆடுமாடுகள் தன்னுடைய அரச பதவிக்கு வேட்டு வைக்கும் என்று அவன் ஒருபோதும் கற்பனை செய்திருக்க மாட்டான். பெரிய பாவம் அல்லது சின்ன…

October

பாவத்தை ஒத்துக்கொள்ளுதல்

2023 அக்டோபர் 14 (வேத பகுதி: 1 சாமுவேல் 15,24 முதல் 25 வரை) “நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன்; நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன்” (வசனம் 23). கர்த்தருடைய கட்டளையையும் வார்த்தைகளையும் மீறுவது பாவம் என்று சவுலுக்குத் தெரிந்திருந்தது. அவன் பாவத்தை அறியாமல் செய்யவில்லை; அவன் அறிந்தே செய்தான். ஆகவே இதன் விளைவும் அவனுக்கு அதிகமாக இருந்தது. சில பாவங்களை நாம் அறிந்தும், சிலவற்றை அறியாமல் செய்துவிடுகிறோம். “முன்னே…

October

மறைவான பகுதி

2023 அக்டோபர் 13 (வேத பகுதி: 1 சாமுவேல் 15,23) “இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது;” (வசனம் 23). “சூனியக்காரியை உயிரோடே வைக்க வேண்டாம்” (யாத்திராகமம் 22,18) என நியாயப்பிரமாணம் கட்டளையிடுகிறது. “விக்கிரகாராதனையும், பில்லிசூனியமும்” மாம்சத்தின் கிரியைகளாக பவுல் பட்டியலிடுகிறார் (கலாத்தியர் 5,20). இவ்விரண்டுக்கும் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசி சாமுவேல் ஆவிக்குரிய வகையில் புதிய அர்த்தத்தைத் தருகிறார். இரண்டகம் பண்ணுதல் அதாவது தேவனுடைய ஆளுகையை எதிர்த்து, விரோதமாகக் கலகம் பண்ணுவது பில்லிசூனியப்…

October

பலியா, கீழ்ப்படிதலா?

2023 அக்டோபர் 12 (வேத பகுதி: 1 சாமுவேல் 15,22) “அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்” (வசனம் 22). மனந்திரும்பாமலும், கீழ்ப்படிதலில்லாமலும் கிறிஸ்தவத்தின் அனைத்து சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்தாலும் அவற்றால் எவ்விதப் பிரயோஜனமும் கிடையாது என்பதை சாமுவேல் சவுலுக்குத் தெரியப்படுத்தினான். கீழ்ப்படியாதவனின் இருதயம் தேவனுக்கு முன்பாக வெறுமையான காலிப்பாத்திரம் போன்றதே. அதனால் ஓசைகளை எழுப்பமுடியுமே தவிர, அது கர்த்தருக்கு உகந்த பாடல்களாக…