March

ஒளிக்கும் இருளுக்குமான போர்

2023 மார்ச் 31 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 7,15 முதல் 25 வரை) “கிதியோனும் அவனோடிருந்த நூறுபேரும் அந்த ஜாமத்தின் துவக்கத்திலே பாளையத்தின் முன்னணியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள்” (வசனம் 19). மாபெரும் மீதியானியரின் சேனையை முறியடிக்க கர்த்தரையே சார்ந்துகொள்ள வேண்டும் என்பதை அறிந்தவனாக, யோசுவாவைப் போலவே கிதியோனும் கர்த்தரைத் தொழுது கொண்டு போருக்கு ஆயத்தமானான் (வசனம் 15; யோசுவா 5,13 முதல் 15). நாம் விசுவாசத்தோடு செல்வோமானால், “அநேகம்பேரைக் கொண்டாகிலும்,…

March

விசுவாசிகளின் ஐக்கியத்தின் பெலன்

2023 மார்ச் 30 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 7,9 முதல் 14 வரை) “அப்படியே அவனும் அவன் வேலைக்காரனாகிய பூராவும் சேனையின் முன்னணியிலே ஜாமம் காக்கிறவர்களின் இடமட்டும் போனார்கள்” (வசனம் 11). “நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்” (2 கொரிந்தியர் 12,10) என்ற பவுலின் கூற்று கிதியோனின் வாழ்க்கை முழுவதிலும் இழையோடுகிறது.  மக்களைப் பலவீனமான நிலைக்குக் கொண்டு வந்து, தம்மையே அவர்கள்  சார்ந்து இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாயிருக்கிறார். மக்களின் பக்கம் இருந்து இப்பொழுது தலைவனின் பக்கம்…

March

நம்முடைய நோக்கம் என்ன?

2023 மார்ச் 29 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 7,1 முதல் 8 வரை) “என் கை என்னை இரட்சித்தது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீம்பு பேசுகிறதற்கு இடமாகும்” (வசனம் 2). கிதியோன் இஸ்ரவேல் நாடு முழுவதிலும் இருந்து, 32,000 மனிதர்களைப் போருக்காகக் கூட்டிச் சேர்த்தான். கர்த்தர் மீதியானியரின்மீது வெற்றியைத் தருவதாக ஏற்கனவே அடையாளங்களின் வாயிலாக கிதியோனுக்கு தெரிவித்துவிட்டார். இதுவரை மீதியானியாருக்குப் பயந்து, அவர்களுக்கு அடிமைகளாக இருந்த இந்த மக்கள், கர்த்தர் தருகிற வெற்றியை தங்களுக்கானதாக ஆக்கிக்கொள்ளும்…

March

அழைப்பை உறுதியாக்குதல்

2023 மார்ச் 28 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 6,33 முதல் 40 வரை) “அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார்” (வசனம் 34). தன் குடும்பத்தாரையும் ஊராரையும் வென்ற பிறகு, நாட்டை இரட்சிக்கும் நேரம் வந்தது. கிதியோன் இப்பொழுது அதற்கு ஆயத்தமாயிருக்கிறான். ஆண்டு தோறும் விளைச்சலைக் கொள்ளையடிக்க வருவதைப் போல, இந்த ஆண்டும் “மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரர் யாவரும் ஏகமாய்க்கூடி, ஆற்றைக் கடந்துவந்து, யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினார்கள்” (வசனம் 33). கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கி,…

March

சத்தியத்துக்காக துணிந்து நிற்றல்

2023 மார்ச் 27 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 6,28 முதல் 32 வரை) “தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம் பாகால் அவனோடே வழக்காடட்டும் என்று சொல்லி, அந்நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பெயரிடப்பட்டது” (வசனம் 32). இரவிலே பாகாலின் பலிபீடம் இடிக்கப்பட்ட செய்தி, விடிந்ததும் ஊராருக்குத் தெரிந்துவிட்டது.  அதுமட்டுமின்றி, புதியதாக கர்த்தருக்கென்று ஒரு பலிபீடம் கட்டப்பட்டிருப்பதையும், அதில் யோவாசின் இரண்டாம் காளை பலியிடப்பட்டிருப்பதையும் கண்ட மக்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றனர். கிதியோனுக்கு எதிர்ப்பு வலுத்தது, இந்தக் குற்றத்தைச் செய்ததற்காக…

March

கிறிஸ்தவன் மறைந்திருக்க முடியாது

2023 மார்ச் 26 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 6,25 முதல் 27 வரை) “ நீ உன் தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழு வயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன் தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருக்கிற தோப்பை வெட்டிப்போட்டு” (வசனம் 25). பாகால் விக்கிரக வழிபாடு நாடு முழுவதும் வியாபித்திருந்தது. கிதியோனின் குடும்பமும் இதற்கு விதிவிலக்கல்ல. அவனுடைய தந்தை யோவாசே ஒரு பாகாலுக்காக ஒரு பலிபீடத்தைக் கட்டி தன்னுடைய ஊரார் முழுவதும் அதை…

March

கூடுதல் வெளிப்பாடு

2023 மார்ச் 25 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 6,22 முதல் 24 வரை) “அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பெயரிட்டான்” (வசனம் 24). நெருப்பின் தோற்றமும், கர்த்தருடைய தூதனானவர் திடீரென மறைந்துபோனதும், இதுவரை தாம் கர்த்தருடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதைக் கிதியோன் உணர்ந்துகொண்டான் (வசனம் 21,22). முதலில், “என்னோடு பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காட்ட வேண்டும்” எனக் கேட்டான் (வசனம் 17). அதற்கான அடையாளத்தைக்…

March

பிரியமான ஆராதனை

2023 மார்ச் 24 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 6,20 முதல் 21 வரை) “கர்த்தருடைய தூதன் தமது கையிலிருந்து கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்” (வசனம் 21). கிதியோன் மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் பலியை ஆயத்தம் செய்துகொண்டு வந்தான். நாட்டில் வறுமையும் தனக்குத் தேவையும் இருந்த காலகட்டத்தில் அவனுடைய இந்தச் செயல் அவனுடைய தியாகத்தை நினைவூட்டுகிறது. ஒரு துட்டுக்குச் சரியான இரண்டு காசைப்போட்ட ஏழை விதவைப் பெண் ஆண்டவரால் பாராட்டுதலைப் பெற்றுக்கொண்டாள் (மாற்கு…

March

கர்த்தர் காத்திருத்தல்

2023 மார்ச் 23 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 6,17 முதல் 19 வரை) “நீ திரும்பி வருமட்டும் நான் இருப்பேன் என்றார்” (வசனம் 18). கிதியோன் தன்னுடைய சொந்தத் திறமைகளைப் பார்த்துத் தயங்கினாலும், தன்னோடு பேசுகிறவர் யார் என அறிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆசையும் உறுதியும் அவனுக்கு இருந்தது.  “என்னோடு பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காட்ட வேண்டும்” என்ற கிதியோனின் கோரிக்கைக்கு, “நீ திரும்பிவருமட்டும் நான் இருப்பேன்” (வசனம் 17,18) என்ற கர்த்தருடைய…

March

கிறிஸ்துவுக்குள் நம்முடைய ஸ்தானம்

2023 மார்ச் 22 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 6,12 முதல் 16 வரை) “பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (வசனம் 12). கர்த்தரால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசியின் வார்த்தைகள் கிதியோனிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. தங்கள் முன்னோர்களுக்கு பலவிதமான அற்புதங்களை நிகழ்த்திய தேவன் தற்பொழுது ஏன் தங்களோடு இருந்து தங்களுடைய துன்பத்தில் தங்களைத் தப்புவிக்கவில்லை என்ற மனக்குறை அவனுக்கு இருந்தது. இந்தப் பொல்லாதவர்களின் கூட்டத்தின் நடுவில், தன்னைப் பெலவீனமானவனாகவும், எளியவனாகவும் கருதிக்கொண்டிருந்த ஒரு தனி மனிதனை மக்களுக்கு விடுதலையையும்…