October

கர்த்தரைக் கனம்பண்ணுவோம்

2023 அக்டோபர் 31 (வேத பகுதி: 1 சாமுவேல் 17,41 முதல் 47 வரை) “கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது” (வசனம் 47). கோலியாத் தாவீதை அசட்டைபண்ணினான் (வசனம் 42), தன் தேவர்களைக் கொண்டு அவனைச் சபித்தான் (வசனம் 43). முதலில் தாவீதை அவனுடைய அண்ணன் இகழ்ந்தான், இப்பொழுது கோலியாத் இகழ்கிறான். “ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது” (கலாத்தியர் 4,29)…

October

ஆவிக்குரிய ஆயுதங்கள்

2023 அக்டோபர் 30 (வேத பகுதி: 1 சாமுவேல் 17,31 முதல் 40 வரை) “தன் தடியைக் கையிலே பிடித்துக்கொண்டு, ஆற்றிலிருக்கிற ஐந்து கூழாங்கல்லுகளைத் தெரிந்தெடுத்து, அந்தப் பெலிஸ்தனண்டையிலே போனான்” (வசனம் 40). எதிர்மறை பேச்சுகள் தாவீதை சும்மா அமர்ந்திருக்கச் செய்திடவில்லை. ஒட்டுமொத்த இராணுவமும் வெறுமனே கோலியாத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கையில் தாவீது நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தான். கர்த்தர் நமக்காக போரிடுவாரெனில் நாம் காலதாமதம் செய்வதில் பயனில்லை என்பதே அவனுடைய குறிக்கோளாக இருந்தது. தாவீதின் வார்த்தைகள்…

October

கர்த்தர்போல் சிந்திப்பது

2023 அக்டோபர் 29 (வேத பகுதி: 1 சாமுவேல் 17,21 முதல் 30 வரை) “அதற்குத் தாவீது: நான் இப்பொழுது செய்தது என்ன? நான் வந்ததற்கு முகாந்தரம் இல்லையா என்று சொல்லி …” (வசனம் 29). தாவீது போர்க்களத்துக்கு வந்து, உடனடியாகச் தன் சகோதரர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கச் சென்றான். ஆனால் அங்கு அவனுக்கு ஒரு மோசமான அனுபவமே கிடைத்தது. எப்பொழுதெல்லாம் நாம் விசுவாசத்துடன் அடியெடுத்து முன்னேறிச் செல்ல ஆயத்தமாகிறோமோ அப்பொழுதெல்லாம் பிறரால் தடைகள் ஏற்படத்தான் செய்கின்றன.…

October

பொறுப்புள்ள மகன்

2023 அக்டோபர் 28 (வேத பகுதி: 1 சாமுவேல் 17,16 முதல் 20 வரை) “தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளி வசமாய் விட்டு, ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய்…” (வசனம் 20). பெலிஸ்தியருடனான போர் தொடங்குவதற்கு முன்னதாகவே தாவீது தன் தந்தையின் வீட்டுக்குச் சென்று, பழையபடி ஆடுகளை மேய்க்கச் சென்றுவிட்டான் (வசனம் 15). அரண்மனையின் மும்முரமான வேலைச் சூழலிலிருந்து தன் மனதுக்குப் பிடித்த காடுகளோடும், ஆடுகளோடும் நேரத்தைச் செலவிடுவதற்குச் சென்றுவிட்டான். அரசாங்க உத்தியோகத்தை விட்டு மீண்டும்…

October

கலக்கம் வேண்டாம்

2023 அக்டோபர் 27 (வேத பகுதி: 1 சாமுவேல் 17,11 முதல் 15 வரை) “சவுலும் இஸ்ரவேலர் அனைவரும் அந்தப் பெலிஸ்தனுடைய வார்த்தைகளைக் கேட்டு, கலங்கி மிகவும் பயப்பட்டார்கள்” (வசனம் 11). தான் ஒருவனால் மட்டும் முழு இஸ்ரவேல் படையையும் வெல்ல முடியாது என்று கோலியாத்துக்குத் தெரியும். ஆயினும் அவனுடைய நோக்கம் அவர்களைக் கலங்கடிப்பதே. கர்த்தருக்குள்ளான ஒரு விசுவாசியின்மீது சாத்தானுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. கர்த்தர் அனுமதிக்காதபட்சத்தில் தன்னால் அவர்களை நேரடியாகத் தாக்கி ஜெயிக்க முடியாது என்பது…

October

பயம் வேண்டாம்

2023 அக்டோபர் 26 (வேத பகுதி: 1 சாமுவேல் 17,1 முதல் 10 வரை) “அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து புறப்பட்டுவந்து நடுவே நிற்பான்” (வசனம் 4). பெலிஸ்தியர் இஸ்ரவேலுக்கு விரோதமாக படையெடுத்து வந்தார்கள். ஆனால் இந்த முறை சற்றுத் தந்திரமாக, ஒன்பது அடிக்கும் மேலான உயரம் கொண்ட கோலியாத் என்னும் ராட்சதனைக் கொண்டு விளையாட்டுக் காட்டினார்கள். சவுல் தேவ வல்லமையையும், ஆவியானவரின் ஒத்தாசையையும் இழந்தபோது, கோலியாத்தைக் கண்டு…

October

சரியான திசையில் பயணம்

2023 அக்டோபர் 25 (வேதபகுதி: 1 சாமுவேல் 16,19 முதல் 23 வரை) “அப்பொழுது சவுல்: ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி, ஆட்டுமந்தையில் இருக்கிற உன் குமாரனாகிய தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச் சொன்னான்” (வசனம்  19). நம்முடைய தேவனைப் போல ஞானமுள்ளவர் யார்? அவருக்கு நிகர் அவரேதான். சவுலுக்கு மாற்றாக ஒருவனை ராஜாவாக அபிஷேகம் செய் என்று கர்த்தர் சாமுவேலிடம் சொன்னபோது, சவுல் இதைக் கேள்விப்பட்டால் என்னைக் கொன்றுபோடுவானே என்று பயந்தான். ஆனால் அதே சவுல்,…

October

பல்துறை வித்தகன்

2023 அக்டோபர் 24 (வேத பகுதி: 1 சாமுவேல் 16,18) “இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரிய முள்ளவன்; கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார்  ” (வசனம் 18). இதுவரை நமக்கு தாவீது ஓர் ஆட்டிடையனாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தான் (வசனம் 11). இப்பொழுது அவன் நமக்கு ஒரு பல்துறை வித்தகனாக அறிமுகமாகிறான். தேவன் ஒரு ராஜாவைத் தெரிந்துகொள்வாரெனில் அவன் எப்படிப்பட்ட தகுதிகளோடு இருப்பான் என்பதற்கு பதின்பருவ தாவீது…

October

இசையும் பாடலும்

2023 அக்டோபர் 23 (வேத பகுதி: 1 சாமுவேல் 16,15 முதல் 17 வரை) “அப்பொழுது சவுலின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, தேவனால் விடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி உம்மைக் கலங்கப்பண்ணுகிறதே” (வசனம் 15). சவுலிடம் விடப்பட்ட பொல்லாத ஆவியினால் அவன் துயரமடைந்து, மனஉளைச்சலுக்கு ஆளான நிலையை அவனுடைய ஊழியர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டார்கள். ஆயினும் அவர்களுக்கும் ஆவிக்குரிய சிந்தை இல்லாததால், மனந்திரும்புதலைப் பற்றியோ, பாவ அறிக்கையைப் பற்றியோ பேசாமல், இசையின் மூலமாக கிடைக்கும் விடுதலையைப் பற்றியே…

October

மனஉளைச்சலுக்கு விடுதலை

2023 அக்டோபர் 22 (வேத பகுதி: 1 சாமுவேல் 16,14) “கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது” (வசனம் 14). எப்பொழுது தாவீது அபிஷேகம் செய்யப்பட்டானோ அது முதல் கர்த்தருடைய ஆவியானவர் அவன்மீது தங்கினார். பழைய ஏற்பாட்டில் விசுவாசிகளுக்குள் வாசம்பண்ணும்படியாக நிரந்தரமாக அருளப்படவில்லை. கர்த்தர் ஒருவனைப் பயன்படுத்த விரும்புவாரெனில் அப்பொழுது அவன்மீது ஆவியானவர் தங்குவார். பரிசுத்த ஆவியானவர் தாவீதின்மீது வந்தபோதோ, கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி…