July

விமர்சனங்களுக்கு செவிகொடுத்தல்

2023 யூலை 31 (வேத பகுதி: 1 சாமுவேல் 3,15 முதல் 18 வரை) “சாமுவேல் விடியற்காலமட்டும் படுத்திருந்து, கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்தான்; சாமுவேல் ஏலிக்கு அந்தத் தரிசனத்தை அறிவிக்கப் பயந்தான்” (வசனம் 15). ஏலியின் குடும்பத்தாரின்மேல் கர்த்தரால் எழுதப்பட்ட தீர்ப்பு சாமுவேலுக்குத் துக்கமாகவும் வேதனையாகவும் இருந்தது. இதுவரைக்கும் தன்னை கர்த்தருக்குள் வளர்த்து, ஊழியத்தில் பயிற்சி அளித்து வந்த ஏலியின் மேல் வந்த அவருடைய கோபத்தை நிச்சயமாகவே சாமுவேலால் எளிதாக எடுத்துக்கொண்டிருக்க முடியாது. அவன் விடியும்…

July

மனந்திரும்புவதற்கான வாய்ப்பு

2023 யூலை 30 (வேத பகுதி: 1 சாமுவேல் 3,11 முதல் 14 வரை) “ஏலியின் குடும்பத்தார் செய்த அக்கிரமம் ஒருபோதும் பலியினாலாவது காணிக்கையினாலாவது நிவிர்த்தியாவதில்லை … என்றார்” (வசனம் 14). கர்த்தர் சாமுவேலை உண்மையுள்ளவன் என்று கண்டதாலே, ஏலியின் குடும்பத்தாருக்கு வரவேண்டிய தண்டனையை அவனிடத்தில் அறிவித்தார். சாமுவேல் ஏலிக்கு உண்மையுள்ளவனாக இருந்தான், எனவே தனக்கு உண்மையுள்ளவனாக இருப்பான் என்று ஒரு கடினமான வெளிப்பாட்டைக் கொடுக்கிறார். கொஞ்சத்தில் உண்மையுள்ளவனை அநேகத்தின்மேலும் அதிகாரியாக்குவேன் என்று நம்முடைய ஆண்டவர் கூறியிருக்கிறார்…

July

கர்த்தாவே சொல்லும்

2023 யூலை 29 (வேத பகுதி: 1 சாமுவேல் 3,10) “அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்” (வசனம்  10). நான்காவது தடவையாக கர்த்தர் வந்து நின்று சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார். கர்த்தர் அங்கு வந்து நின்றாலும் சாமுவேல் சத்தத்தை மட்டுமே கேட்டான். அவன் கர்த்தருடைய சத்தத்தை தரிசனத்திலோ, சொப்பனத்திலோ அல்ல, நேரடியாகவே கேட்டான். ஆதாமும்  ஏவாளும் பாவஞ்செய்த பிறகு, தோட்டத்திலே…

July

சரியான வழிநடத்துதல்

2023 யூலை 28 (வேத பகுதி: 1 சாமுவேல் 3,6 முதல் 9 வரை) “சாமுவேலை நோக்கி: நீ போய்ப்படுத்துக்கொள்; உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான்” (வசனம்  9). கர்த்தர் மீண்டும் சாமுவேலே என்று அழைத்தார் (வசனம்  6). அவனோ எழுந்து ஏலியிடம் ஓடினான். ஏலி தன்னை அழைக்கிறார் என சாமுவேல் கருதியது தவறுதான், ஆனால் அவன் செய்தது சரியே. அழைப்பு வந்தால் எழுந்து செல்ல வேண்டும்…

July

இதோ அடியேன்

2023 யூலை 27 (வேத பகுதி: 1 சாமுவேல் 3,2 முதல் 5 வரை )  “அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி … ” (வசனம்  4). சிறுவன் சாமுவேலைப் பற்றிய, நன்கு அறிமுகமான இந்த வசனங்களை நாம் மீண்டும் படிக்கும்போது, அனைவருக்கும் குழந்தை பருவத்தின் இனிமையான காட்சிகள் வந்துபோயிருக்கும். நாம் கிறிஸ்தவக் குடும்பத்தில் வளர்க்கப்பட்டிருந்தால் நிச்சயமாக தன் தாயிடமோ அல்லது பாட்டி தாத்தாவிடமோ அல்லது ஞாயிறு பள்ளி…

July

மதிப்புமிகுந்த கர்த்தருடைய வார்த்தை

2023 யூலை 26 (வேத பகுதி: 1 சாமுவேல் 3,1) “சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது” (வசனம்  1). சிறுவன் சாமுவேல் தேவபக்தியற்ற மக்கள் நடுவில் ஒரு தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ்ந்தான். எகிப்தின் அரண்மனையில் தன்னைச் சுற்றிலும் கடவுளை அறியாத மக்கள் இருந்தபோதிலும், தேவனை நம்புகிறவனாக வளர்ந்த மோசேயைப் போல, பாபிலோனின் அரண்மனையில் உலகத்தின் சிற்றின்பங்களினால் மூழ்க்கிப்போயிருந்த வாலிபர்களின் நடுவில் பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்த…

July

கடவுளின் தீர்ப்பு

2023 யூலை 25 (வேத பகுதி: 1 சாமுவேல் 2,27 முதல் 36 வரை) “என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (வசனம் 30). ஆசாரியனாகிய ஏலியின் மகன்கள் செய்த தவறான நடத்தை மக்களுடைய பார்வையில் மட்டுமின்றி, கர்த்தருடைய பார்வையிலும் மோசமானதாக இருந்தது. அது அவருடைய பெயருக்கு அவமதிப்பை ஏற்படுத்தியது. ஓப்னி, பினெகாஸ் ஆகிய இருவரும் ஆசரிப்புக்கூடாரத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். பிற மக்களுடன் ஒப்பிடும்போது, அவர்களுடைய…

July

வளருதல்

2023 யூலை 24 (வேத பகுதி: 1 சாமுவேல் 2,26) “சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான்” (வசனம் 26). சாமுவேல் குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ச்சியடைந்து வாலிபன் என்ற கட்டத்தை எட்டினான். அவன் கர்த்தரிடம் மட்டுமின்றி மனிதரிடமும் பிரியமாக நடந்துகொண்டான். ஏலி தன் மகன்களைச் சரியாக வளர்ப்பதில் தோல்வியடைந்தவன்தான், ஆனால் சாமுவேலை மிகக் கவனமாக வளர்த்திருக்கிறான். அவன் சாமுவேலை தேவ உறவில் எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதையும், மனித உறவை எவ்வாறு…

July

நாம் பாவஞ்செய்தால்…

2023 யூலை 23 (வேத பகுதி: 1 சாமுவேல் 2,22 முதல் 25 வரை) “மனுஷனுக்கு விரோதமாக மனுஷன் பாவஞ்செய்தால், நியாயாதிபதிகள் அதைத் தீர்ப்பார்கள்; ஒருவன் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்வானேயாகில், அவனுக்காக விண்ணப்பஞ்செய்யத்தக்கவன் யார் என்றான்” (வசனம் 26). ஆசாரியனாகிய ஏலிக்கு மிகவும் வயதாகிவிட்டது. தன்னுடைய குமாரர்கள் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டான். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றுகூட இவனுக்குத் தெரியவில்லை அல்லது நேரடியாகச் சென்று பார்வையிடவுமில்லை. அவனுடைய குமாரர்களுடைய பாவங்கள் வாய்வழிச் செய்தியாகவே இவனை வந்தடைந்தது என்பது…

July

சமநிலை வளர்ச்சி

2023 யூலை 22 (வேத பகுதி: 1 சாமுவேல் 2,19 முதல் 21 வரை) “அவனுடைய தாய் வருஷந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன் புருஷனோடேகூட வருகிறபோதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள்” (வசனம் 19). அன்னாள் தன் நேசத்துக்குரிய மகன் சாமுவேலை கர்த்தருக்கென்று ஒப்புவித்திருந்தாலும் அவள் அவனை நேசிப்பதை நிறுத்தவில்லை. ஒருவேளை நாள்தோறும் அவனுடைய முகத்தைப் பார்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அவனைப் பற்றிய நினைவுகள் அவளுடைய இருதயத்திலிருந்து இல்லாமற்போயிருக்காது. ஆண்டுதோறும் குடும்பமாகப்…