April

கிருபையில் வளருதல்

2023 ஏப்ரல் 30 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 13,24 முதல் 25 வரை) “பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது, கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்” (வசனம் 24). கர்த்தர் தம்முடைய வார்த்தையில் உண்மையாயிருந்தார். அந்தப் பெண்மணிக்கு அவர் வாக்களித்தபடியே அவள் ஒரு குமாரனைப் பெற்றெடுக்கும்படி செய்தார் (வசனம் 24). எப்பொழுது அவசியமோ அப்பொழுது தன்னுடைய இரட்சகனை இந்த உலகத்தில் பிறக்கச் செய்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்…

April

நியாயப்பிரமாணத்திலிருந்து கிருபைக்கு

2023 ஏப்ரல் 29 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 13,21 முதல் 23 வரை) “கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார்” (வசனம் 23). புதிய ஏற்பாட்டில், பிலிப்பு என்னும் அவருடைய சீடன், “ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது போதும்” என்று கேட்டதற்கு, “இவ்வுளவு காலம் நான் உங்களுடனே இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்று அவர் அவனுக்கு மறுமொழி கொடுத்தார் (யோவான்…

April

அவரை மெய்யாய் அறிந்துகொள்ளுதல்

2023 ஏப்ரல் 28 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 13,15 முதல் 20 வரை) “அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்” (வசனம் 16). இதுவரை தன்னோடு பேசிக்கொண்டிருக்கிற கர்த்தருடைய தூதனானவருக்கு விருந்தோம்பல் செய்ய வேண்டும் என்பது மனோவாவுக்கு ஆசை. அவனுடைய இந்த ஆசையைக் கர்த்தர் நிராகரிக்கவில்லை, ஆயினும் அவனுடைய ஆசையை அவருக்கேற்ற விதமாகத் திருப்பினார் (வசனம் 15 முதல் 16). நீ ஆட்டுக்குட்டியைச் சமையல் பண்ணி எடுத்துவர வேண்டாம், அதற்குப் பதில் அதைச் சர்வாங்க தகன…

April

பிள்ளை வளர்ப்புக்கான ஜெபம்

2023 ஏப்ரல் 27 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 13,12 முதல் 14 வரை) “அப்பொழுது மனோவா, நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும், அதை எப்படி நடத்த வேண்டும் என்று கேட்டான்” (வசனம் 12). தன் மனைவியோடு பேசினவர் நீர்தானா என மனோவா கர்த்தரிடம் கேட்டபோது, “நான் தான்” என்ற உறுதிமிக்க வார்த்தையை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டான் (வசனம் 11). இதற்குப் பின் அவன் எங்களுக்கு குழந்தை பிறக்குமா? அவள் இதுவரை பிள்ளை…

April

உறுதிக்கான ஜெபம்

2023 ஏப்ரல் 26 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 13,8 முதல் 11 வரை) “ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனிதன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து” (வசனம் 8). மனோவாவின் மனைவி கர்த்தருடைய தூதனைத் தரிசித்தாள். முதல் முறை சந்திப்பின் போது நடந்த காரியத்தை தன் கணவனிடம் தெரிவித்தாள் (வசனம் 6). இரண்டாம் முறை சந்தித்தபோது, தன் கணவனை அழைத்துவர ஓடினாள் (வசனம் 10). இந்த நேரத்தில் அவள் யாதொரு முன்முடிவுக்கு வராமலும், அதைத்…

April

நசரேய விரதம்

2023 ஏப்ரல் 25 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 13,5 முதல் 7 வரை) “அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்” (வசனம் 5). நசரேய விரதம் தானாக முன்வந்து மனபூர்வமாக கடைப்பிடிக்க வேண்டிய பொருத்தனை. விருப்பமுள்ள ஆண்களோ, பெண்களோ குறிப்பிட்ட காலத்துக்கு இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். இதற்கென்று சொல்லப்பட்ட நிபந்தனைகளை தவறாமல் நிறைவேற்ற வேண்டும் (வாசிக்க: எண்ணாகமம் 6 – ஆம் அதிகாரம்). இங்கே ஒருவன் பிறப்பதற்கு முன்னரே, கர்த்தருடைய தூதனானவர் வந்து நசரேய விரதத்தைக்…

April

சகோதரிகளின் பங்களிப்பு

2023 ஏப்ரல் 24 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 13,3 முதல் 4 வரை) “நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய்” (வசனம் 4). “பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று” (ரோமர் 5,20) என்று பவுல் கூறினதுபோல, “பொல்லாத காரியங்களில்” பெருகிய இஸ்ரவேல் மக்களை மீட்பதற்கான திட்டத்தைத் தேவனே துவக்குகிறார். அவர்களே தங்களுடைய ஆவிக்குரிய காரியத்தில் ஆர்வங்கொள்ளாதபோதும், தேவன் அவர்களைக் குறித்ததான ஆர்வத்தைக் கைவிட்டுவிடவில்லை. ஆவிக்குரிய இருள் நிறைந்து, மக்கள் தங்களுடைய குருட்டாட்டத்தில் மூழ்கிப்போயிருந்த காலத்தில்,…

April

உணர்வற்ற நிலைக்குத் தள்ளப்படுதல்

2023 ஏப்ரல் 23 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 13,1 முதல் 2 வரை) “அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா; அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள்” (வசனம் 2). இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள் (வசனம் 1). மானிட இயல்பு எப்போதுமே தன்னைப் படைத்த இறைவனிடமிருந்து விலகிச் செல்லக் கூடியதாகவே உள்ளது. கர்த்தரின் அற்புதச் செயல்களையோ அல்லது தங்களுடைய முன்னோர்கள் அனுபவித்த ஆசீர்வாதங்களையோ அல்லது…

April

ஆவிக்குரிய தரத்தின் வீழ்ச்சி

2023 ஏப்ரல் 22 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 12,8 முதல் 15 வரை) “அவனுக்குப் பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் நியாயம் விசாரித்தான்… பின்பு இப்சான் மரித்து, பெத்லெகேமிலே அடக்கம் பண்ணப்பட்டான்” (வசனம் 8). யெப்தாவின் மரணத்துக்குப் பின்னர், “பெத்லெகேம் ஊரைச் சேர்ந்த இப்சான், செபுலோன் கோத்திரத்தைச் சேர்ந்த ஏலோன், இல்லேலின் மகன் அப்தோன்”  ஆகிய மூன்று நியாயாதிபதிகள் இஸ்ரவேல் நாட்டை நியாயம் விசாரித்தார்கள். இவர்கள் எதிரிகளோடு எவ்வித யுத்தமோ, அல்லது ஏதாவது தியாகச் செயலோ செய்ததாக…

April

இவ்வுலகப் பணியிலிருந்து ஓய்வு

2023 ஏப்ரல் 21 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 12,7) “யெப்தா இஸ்ரவேலை ஆறு வருஷம் நியாயம் விசாரித்தான்; பின்பு கீலேயாத்தியனான யெப்தா மரித்து, கீலேயாத்திலுள்ள ஒரு பட்டணத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்”. (வசனம் 7). யெப்தா இஸ்ரவேலை ஆறு ஆண்டுகள் நியாயம் விசாரித்தான். இதுவரை பணியாற்றிய நியாயாதிபதிகளில் குறைந்த ஆண்டுகள் சேவை செய்தவன். ஆயினும் கர்த்தர் தனக்குக் கிருபையாய் வழங்கிய ஆண்டுகளை அவருக்காகச் சேவை செய்வதற்குப் பயன்படுத்தினான். அவன் தன் சகோதரர்களால் துரத்தியடிக்கப்பட்ட போது, அந்நிய தேசத்தில் தன் சொந்த…