தேடிவருகிற கர்த்தர்
2023 மார்ச் 21 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 6,7 முதல் 11 வரை) “கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடத்திற்கு அனுப்பினார்” (வசனம் 8). இஸ்ரவேல் மக்கள் கர்த்தருடைய பார்வையில் மீண்டும் பொல்லாத காரியங்களைச் செய்தபோது, அவர்களை அழைத்த அழைப்பில் மாறாதவரும் அன்புள்ளம் கொண்டவருமாகிய கர்த்தர் தம்முடைய பக்கம் திரும்ப அழைத்துக் கொள்வதற்காகப் பிரயாசப்படுகிறார். “உன் நிலத்தின் கனியையும், உன் பிரயாசத்தின் எல்லாப் பலனையும் நீ அறியாத ஜனங்கள் புசிப்பார்கள்; நீ சகல நாளும் ஒடுக்கப்பட்டும் நொறுக்கப்பட்டும் இருப்பாய்”…