தாற்றுக்கோலால் சண்டையிட்ட சம்கார்
2023 மார்ச் 11 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 3,31) “அவனுக்குப் பிற்பாடு ஆனாத்தின் குமாரன் சம்கார் எழும்பினான்; அவன் பெலிஸ்தரில் அறுநூறுபேரை ஒரு தாற்றுக்கோலால் முறிய அடித்தான்; அவனும் இஸ்ரவேலை இரட்சித்தான்” (வசனம் 31). வேதத்தில் ஓரிரு பகுதிகளில் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ள தேவனுடைய மனிதர்களுக்குள் சம்காரும் ஒருவன். ஆயினும் அவனுடைய பங்களிப்பை விவரிக்க இந்த ஒரு வசனம் போதுமானது. தேவனுக்காக எழும்பிப் பிரகாசித்த துணிச்சலான நட்சத்திர வீரர்களின் பெயர்களோடு சம்காரின் பெயரையும் சேர்ப்பது அவருக்குப் பிரியமாயிருந்திருக்கிறது. நாமும்…