May

பிரச்சினைகளைக் கையாளுதல்

2023 மே 21 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 20,1 முதல் 10 வரை) “அப்பொழுது தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கீலேயாத் தேசத்தாருடன் மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஏகோபித்து சபையாகக் கூடினார்கள்” (வசனம் 1). நியாயாதிபதிகள் காலத்தில் இதுவரை இல்லாத ஒன்று இப்பொழுது நிகழ்ந்தது. தாண் முதல் பெயர்செபா (காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை என்று சொல்லப்படுவது போல) வரையிலான மக்கள் அனைவரும் அதாவது கோத்திரங்களின் அதிபதிகள், தலைவர்கள், மற்றும் சண்டை செய்யக்கூடிய போர்வீரர்கள் ஆகிய…

May

கடைசிக் காலம்

2023 மே 20 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 19,1 முதல் 30 வரை) “இஸ்ரவேலில் ராஜா இல்லாத அந்நாட்களிலே, எப்பிராயீம் மலைகள் அருகே பரதேசியாய்த் தங்கின ஒரு லேவியன் இருந்தான்” (வசனம் 1). இஸ்ரவேலில் ராஜா இல்லாத அந்நாட்களில், எப்பிராயீமின் மலைகளின் அருகே ஒரு லேவியன் தங்கியிருந்தான். இவன் ஒரு நாடோடி.  கானான் தேசத்தில் லேவியர்களுக்கென்று தனிப்பட்ட வகையில் சுதந்தரம் கொடுக்கப்படவில்லையாயினும் அவர்கள் குடியிருக்கும்படி அடைக்கலப்பட்டணங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. கர்த்தரே இவர்களுடைய சுதந்தரம். இவர்களுடைய பணி ஆசரிப்புக்கூடாரத்துடன் தொடர்புடையது.…

May

வழிவிலகுதல்

2023 மே 19  (வேத பகுதி: நியாயாதிபதிகள் 18,7 முதல் 31 வரை) “தேவனுடைய ஆலயம் சீலோவாவிலிருந்த காலம் முழுவதும் அவர்கள் மீகா உண்டுபண்ணின சுரூபத்தை வைத்துக்கொண்டிருந்தார்கள்” (வசனம் 31). இஸ்ரவேல் மக்களுக்குள் கானான் தேசத்தில் தாண் கோத்திரத்தாருக்கு ஒதுக்கப்பட்ட பகுதி எமோரியர் வாழ்ந்த பகுதியாகும். எமோரியர் இவர்களை மலைப்பகுதியிலிருந்து சமவெளிப் பகுதிக்கு இறங்க விடாமல் நெருக்கி, அங்கேயே குடியிருக்கும்படி செய்துவிட்டார்கள். இப்பொழுது பெலிஸ்தியர்களின் அதிகாரமும் ஓங்கிவிட்டது. இரண்டு மாபெரும் எதிரிகள் இருக்கிறார்கள். கர்த்தர் மீது விசுவாசத்தால்…

May

திருப்தி இல்லாமை

 2023 மே 18  (வேத பகுதி: நியாயாதிபதிகள் 18,1 முதல் 6 வரை) “அந்நாட்களிலே இஸ்ரவேலிலே ராஜா இல்லை; தாண் கோத்திரத்தார் குடியிருக்கிறதற்கு, தங்களுக்குச் சுதந்தரம் தேடினார்கள்; அந்நாள்வரைக்கும் அவர்களுக்கு இஸ்ரவேல் கோத்திரங்களுக்கு நடுவே போந்த சுதந்தரம் கிடைக்கவில்லை” (வசனம் 1). “அந்நாட்களிலே இஸ்ரவேலிலே ராஜா இல்லை” என்ற கூற்றானது அவர்கள் கர்த்தரை ராஜாவாக ஏற்று நடக்கவில்லை என்பது மட்டுமின்றி, அவர்கள் கர்த்தரில் திருப்தியடையாமல் மனிதத் தலைமைத்துவத்துக்காக அலைபாய்ந்தார்கள் என்ற உண்மையையும் நமக்கு அறிவிக்கிறது. இராஜா இல்லை…

May

சொந்தவழியில் தேவனைத் தேடுதல்

 2023 மே 17  (வேத பகுதி: நியாயாதிபதிகள் 17,1 முதல் 13 வரை) “அந்நாட்களிலே இஸ்ரவேலிலே ராஜா இல்லை, அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்” (வசனம் 6). நியாயாதிபதிகளின் நூலின் இனிவரும் அதிகாரங்களில் சொல்லப்பட்ட பகுதிகள் இஸ்ரவேல் மக்களின் மிகப்பெரிய ஆவிக்குரிய சீர்கேட்டையும், வீழ்ச்சியையும் நமக்குத் தோலுரித்துக் காட்டுகின்றன. அவர்கள் ஓர் இனமாக கூட்டுச் சேர்ந்து எதிரிகளை எதிர்ப்பதிலிருந்து, ஒரு தனி மனிதனால் எதிரிகளை எதிர்க்கும் நிலைக்கு தாழ்ந்துபோனார்கள். இப்பொழுது அக்குடும்பங்களிலும் பக்தி குறைந்து, சீர்கேடு…

May

கிருபையால் விழித்தெழுதல்

2023 மே 16  (வேத பகுதி: நியாயாதிபதிகள் 16,31) “பின்பு அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரனைவரும் போய், அவனை எடுத்துக்கொண்டுவந்து, சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவே அவன் தகப்பனாகிய மனோவாவின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்” (வசனம் 31). சிம்சோன் தன்னுடைய மரணத்தின் இரகசியத்தைக் கண்டுகொண்ட பின்னர் மரித்தான். அவனுடைய வாழ்க்கையைப் போலவே அவனுடைய மரணமும் வித்தியாசமானதுதான். அவன் மரணத்தைக் கண்டு பயப்படவில்லை, ஆகவே அவன் மரணத்திலும் பேசப்பட்டான். நாமும் நம்முடைய மரணத்தின் இரகசியத்தையும் அதை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் அடைவோமானால்…

May

கிருபையின் மகத்துவம்

2023 மே 15  (வேத பகுதி: நியாயாதிபதிகள் 16,22 முதல் 30 வரை) “அவன் தலைமயிர் சிரைக்கப்பட்ட பின்பு மறுபடியும் முளைக்கத்தொடங்கியது” (வசனம் 22). கர்த்தருடைய சிட்சை என்பது ஒருவனுடைய வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அல்ல, அவனை மீண்டும் புதுப்பிக்கப்பட்ட வாழ்க்கைக்கு நேராகக் கொண்டுவந்து தன்னுடைய நோக்கத்துக்காகப் பயன்படுத்துவதற்குத்தான். “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்” (எபிரெயர் 12,11) என்று புதிய…

May

கண்மருந்து போட்டுக்கொள்வோம்

2023 மே 14  (வேத பகுதி: நியாயாதிபதிகள் 16,20 முதல் 21 வரை) “கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்பொழுதும் போல உதறிப்போட்டு வெளியே  போவேன் என்றான்” (வசனம் 20). சிம்சோன் தன் முடியோடு சேர்ந்து தன் ஆற்றலையும் இழந்தான். அவன் தன்னுடைய சக்தியை மட்டும் இழக்கவில்லை, இஸ்ரவேல் மக்களை நியாயம் விசாரிக்கும் திறனையும் இழந்தான். கர்த்தர் அவனை இந்த உலகத்தில் பிறக்கச் செய்த நோக்கத்தையும் இழந்துவிட்டான். ஒரு தனி மனிதனின் தோல்வி, ஒரு நாட்டுக்கான இழப்பாக…

May

பொய்யான அன்பு

2023 மே 13  (வேத பகுதி: நியாயாதிபதிகள் 16,4 முதல் 19 வரை) “அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான்” (வசனம் 1). சிம்சோனுடைய வாழ்க்கையில் மூன்றாவதாக இடம் பெற்ற பெண் தெலீலாள். அவன் அவளை அதிகமாக நேசித்தான். இதுவரை தனிமையில் வாழ்ந்து வந்த அவனுக்கு இவள் தன் வாழ்க்கைக்கு இனிமை சேர்ப்பாள் என்று எண்ணியிருக்கலாம். ஆனால் அவளோ அவளுடைய பெயருக்கு ஏற்றாற்போலவே அவனுடைய முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்தாள்.…

May

போகக்கூடாத இடம்

2023 மே 12  (வேத பகுதி: நியாயாதிபதிகள் 16,1 முதல் 3 வரை) “பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான்” (வசனம்  1). ஒரு நியாயாதிபதியாக சிம்சோன் இஸ்ரவேல் மக்களை நியாயம் விசாரித்தான். கடந்த காலத்தின் வெற்றியும், நிகழ்காலத்தின் புகழும் ஒரு மனிதனை தற்பெருமைக்கும், அதீத தன்னம்பிக்கைக்கும் நேராக வழிநடத்தக்கூடும். சுயபெலத்தை நம்பிச் செய்யக்கூடிய எந்தக் காரியமும் வருங்கால வெற்றிக்கு உத்திரவாதமில்லை என்பது சிம்சோனின் வாழ்க்கை நமக்குச் சொல்லிக்கொடுக்கும் பாடமாகும்.…