பேசித் தீர்த்துக்கொள்ளுதல்
2023 பெப்ரவரி 18 (வேத பகுதி: யோசுவா 22,21 முதல் 34 வரை) “அந்தச் செய்தி இஸ்ரவேல் புத்திரரின் பார்வைக்கு நன்றாயிருந்தது” (வசனம் 33). ரூபன் புத்திரரும், காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் தாங்கள் பலிபீடம் கட்டியதன் நோக்கத்தை விளக்கினார்கள். “தேவாதி தேவனாகிய கர்த்தரே அதை அறிந்திருக்கிறார்” (வசனம் 22) என்று கர்த்தரை சாட்சியாக முன்னிறுத்தி தங்கள் உண்மையை விளங்கப்பண்ணினார்கள். அது எவ்விதத் தவறான நோக்கத்துக்காகவும், அல்லது பிரிந்து போகும் எண்ணத்துடனும் கட்டப்படவில்லை என்பதை உறுதிபடக்…