முதல் குமாரனாக யோசேப்பு
2023 பெப்ரவரி 8 (வேத பகுதி: யோசுவா 16,1 முதல் 10 வரை) “யோசேப்பின் புத்திரருக்கு அகப்பட்ட பங்கு வீதமாவது” (வசனம் 1). யூத கோத்திரத்தாருக்கு முதன் முதலாக பங்குவீதம் கொடுக்கப்பட்ட பிறகு யோசேப்பின் பிள்ளைகளுக்கு இரண்டாவதாக ஒதுக்கப்பட்டது. யாக்கோபின் பிள்ளைகளில் யூதா கனத்துக்கும் மேன்மைக்கும் உரியவனாக எண்ணப்பட்டான். ஆகவே பெரும்பாலான இடங்களில் இந்த கோத்திரத்தார் மேன்மைக்குரிய முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டார்கள். இது அரச பரம்பரையாக மாறியது. அரசாண்ட தாவீதும், அரசாள போகிற தாவீதின் வழியில்…