July

ஓர் அற்பமான ஆரம்பம்

2023 யூலை 4 (வேத பகுதி: 1 சாமுவேல் 1,1) “எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பேர்” (வசனம் 1). இப்பொழுது நாம் சாமுவேலின் முதலாம் புத்தகத்துக்கு வந்திருக்கிறோம். ஆயினும் நியாயதிபதிகளின் காலம் இன்னமும் முடிவு பெறவில்லை. இராஜாக்களின் காலம் தொடங்குவதற்கு முன் நடைபெற்ற நிகழ்வுகளோடு இந்தப் புத்தகம் தொடங்குகிறது. இந்த நூல் எல்க்கானா என்னும் மனிதனைப் பற்றிய விவரங்களோடு ஒரு புதிய யுகத்துக்குள் பிரவேசிக்கிறது.…

July

தேவனுடைய நித்தியத் திட்டம்

 2023 யூலை 3 (வேத பகுதி: ரூத் 4,17 முதல் 22 வரை) “அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்” (வசனம் 17). ரூத்துக்கும் போவாசுக்கும் பிறந்த மகனுக்கு நகோமியின் அயல்வீட்டுப் பெண்களெல்லாம் ஒன்றுகூடி ஓபேத் என்று பெயரிட்டார்கள் (வசனம் 17). இவனுடைய மகன் பெயர் ஈசாய். ஈசாயின் மகன் பெயர் தாவீது. ஆபிராகாமின் குமாரனும் தாவீதின் குமாரனும் (மத்தேயு 1,1)…

July

மகிழ்ச்சி நிறைந்த முடிவு

2023 யூலை 2 (வேத பகுதி: ரூத் 4,13 முதல் 16 வரை) “போவாஸ் ரூத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு மனைவியானாள்; … அவள் கர்ப்பந்தரித்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அநுக்கிரகம்பண்ணினார்” (வசனம் 13). பெத்லெகேமின் மூப்பர்களின் வாழ்த்துதல் உண்மையாயிற்று. லேயாளைப் போலவும், ராகேலைப் போலவும், இஸ்ரவேலின் சந்ததி தழைக்கும்படி ரூத்தும் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். “இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்” (சங்கீதம் 127,4) என்ற…

July

சாட்சிகளின் வாழ்த்துதல்

2023 யூலை 1 (வேத பகுதி: ரூத் 4,11 முதல் 12 வரை) “இந்தப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்தானத்தினாலே, உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள்” (வசனம் 12). பெத்லெகேமின் ஒலிமுக வாசலில் நடந்த அந்த நிகழ்ச்சியில் மக்களும், மூப்பர்களும்  ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள். ஓர் ஏழை மோவாபிய பெண் ரூத்தும், பெத்லெகேமின் செல்வந்தன் போவாசுக்கும் திருமணம் நடைபெற உள்ளது என்பது அவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக இருந்தது என்பது…

June

கிரயத்துக்குக்கொள்ளப்படுதல்

2023 யூன் 30 (வேத பகுதி: ரூத் 4,7 முதல் 10 வரை) “ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும் இன்றைய தினம் நீங்கள் சாட்சி என்றான்” (வசனம் 10). நெருங்கிய உறவினனாகிய சுதந்தரவாளியானவன் ரூத்தை என்னால் மீட்க இயலாது என்று ஒதுங்கிக்கொண்டான். இதற்கு அடையாளமாகத் தன்னுடைய காலணியைக் கழற்றி போவாசிடம் அளித்துவிட்டான் (வசனம் 8). அதாவது தன்னுடைய மீட்கும் உரிமையை போவாசுக்கு வழங்கிவிட்டான். நியாயப்பிரமாணம் பாவம் இன்னதென்று அறியப்பண்ணுமே தவிர அதற்கு பாவத்திலிருந்து மீட்பதற்கு வலிமை…

June

கிருபையும் சத்தியமும்

2023 யூன் 29 (வேத பகுதி: ரூத் 4,3 முதல் 6 வரை) “அப்பொழுது அந்தச் சுதந்தரவாளி: நான் என் சுதந்தரத்தைக் கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன்; நான் மீட்கத்தக்கதை நீர் மீட்டுக்கொள்ளும்; நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன் என்றான்” (வசனம் 6). நகோமியின் நெருங்கிய உறவினனும், சுதந்தரவாளியுமானவன், இறந்துபோனவனின் சுதந்தரத்தை  “நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன்” (வசனம் 4) என்று கூறியபோது, போவாசுக்கும் ரூத்துக்கும் இருதயம் எப்படி இருந்திருக்கும்? ஆனால், “அதை மரித்தவன் மனைவியாகிய மோவாபிய ஸ்திரீயான ரூத்…

June

சிக்கல்களைத் தீர்த்தல்

2023 யூன் 28 (வேத பகுதி: ரூத் 4,1 முதல் 2 வரை) “அப்பொழுது அவன் பட்டணத்து மூப்பரானவர்களில் பத்துப்பேரை அழைத்து, இங்கே உட்காருங்கள் என்றான்; அவர்களும் உட்கார்ந்தார்கள்” (வசனம் 2). போவாஸ் ரூத்தை நேசித்தான். இப்பொழுது அவளை மீட்டுக்கொள்வதற்கான காரியங்களில் இறங்கினான். அவன் சுதந்தரவாளி என்ற முறையில் அவளை மீட்டுக்கொள்வதற்கான உரிமையைக் கொண்டிருந்தான். அவன் நேர்மையான முறையில் ரூத்தை விவாகம் செய்ய மனதாயிருந்தான் என்பது மட்டுமின்றி, சட்டப்பூர்வமாகவும் அவளை மனைவியாக்க விருப்பம் கொண்டிருந்தான். இதற்கான நடவடிக்கையே…

June

மறவாத இறைவன்

2023 யூன் 27 (வேத பகுதி: ரூத் 3,16 முதல் 18 வரை) “அப்பொழுது அவள்: என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு; அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான் என்றாள்” (வசனம் 18). ரூத்துக்கு இது பரபரப்பும், எதிர்பார்ப்பும் நிறைந்த நேரம். அவளுடைய இருதயத்தில் போவாஸ் நிறைந்திருக்கிறான். ஆனால் எந்த நேரத்திலும் காரியம் வேறுமாதிரிப் போகலாம். அவள் திருமணம் செய்துகொள்ளப் போகிறாள். ஆனால் அது யாரை…

June

மீட்பின் அச்சாரம்

2023 யூன் 26 (வேத பகுதி: ரூத் 3,14 முதல் 15 வரை) “அவள் விடியற்காலமட்டும் அவன் பாதத்தண்டையில் படுத்திருந்து, களத்திலே ஒரு ஸ்திரீ வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாததற்கு முன்னே எழுந்திருந்தாள்” (வசனம் 14). இரவு முழுவதும் போவாசும் ரூத்தும் தனிமையில் இருந்தார்கள். ஆயினும் அவர்கள் எவ்விதப் பாவமும் நடந்துவிடுவதற்கு இடங்கொடுக்கவில்லை. உண்மையான அன்பு அவர்களுக்கு இடையில் இருந்தது. ஆயினும் மாம்சத்தின் இச்சைக்கு அவர்கள் ஆட்கொள்ளப்படவில்லை. போவாஸ்…

June

நம்பிக்கையின் வார்த்தைகள்

2023 யூன் 25 (வேதபகுதி: ரூத் 3,12 முதல் 13 வரை) “நான் சுதந்தரவாளி என்பது மெய்தான்; ஆனாலும் என்னிலும் கிட்டின சுதந்தரவாளி ஒருவன் இருக்கிறான்” (வசனம் 12). போவாசும் ரூத்தும் இப்போது நெருக்கமானவர்களாகி விட்டார்கள். தனிப்பட்ட முறையிலான இந்த இரவு சந்திப்பு அவர்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அவனை உந்தித் தள்ளியது. ஆயினும் போவாஸ் நேர்மையற்ற முறையில் செயல்பட விரும்பவில்லை என்பது கவனிக்கத்தக்க இன்றியமையாத பாடமாகும். என்னிலும் நெருங்கிய உறவினன் ஒருவன் இருக்கிறான், அவனுக்கே முதல்…