May

கிருபையின் மகத்துவம்

2023 மே 15  (வேத பகுதி: நியாயாதிபதிகள் 16,22 முதல் 30 வரை) “அவன் தலைமயிர் சிரைக்கப்பட்ட பின்பு மறுபடியும் முளைக்கத்தொடங்கியது” (வசனம் 22). கர்த்தருடைய சிட்சை என்பது ஒருவனுடைய வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அல்ல, அவனை மீண்டும் புதுப்பிக்கப்பட்ட வாழ்க்கைக்கு நேராகக் கொண்டுவந்து தன்னுடைய நோக்கத்துக்காகப் பயன்படுத்துவதற்குத்தான். “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்” (எபிரெயர் 12,11) என்று புதிய…

May

கண்மருந்து போட்டுக்கொள்வோம்

2023 மே 14  (வேத பகுதி: நியாயாதிபதிகள் 16,20 முதல் 21 வரை) “கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்பொழுதும் போல உதறிப்போட்டு வெளியே  போவேன் என்றான்” (வசனம் 20). சிம்சோன் தன் முடியோடு சேர்ந்து தன் ஆற்றலையும் இழந்தான். அவன் தன்னுடைய சக்தியை மட்டும் இழக்கவில்லை, இஸ்ரவேல் மக்களை நியாயம் விசாரிக்கும் திறனையும் இழந்தான். கர்த்தர் அவனை இந்த உலகத்தில் பிறக்கச் செய்த நோக்கத்தையும் இழந்துவிட்டான். ஒரு தனி மனிதனின் தோல்வி, ஒரு நாட்டுக்கான இழப்பாக…

May

பொய்யான அன்பு

2023 மே 13  (வேத பகுதி: நியாயாதிபதிகள் 16,4 முதல் 19 வரை) “அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான்” (வசனம் 1). சிம்சோனுடைய வாழ்க்கையில் மூன்றாவதாக இடம் பெற்ற பெண் தெலீலாள். அவன் அவளை அதிகமாக நேசித்தான். இதுவரை தனிமையில் வாழ்ந்து வந்த அவனுக்கு இவள் தன் வாழ்க்கைக்கு இனிமை சேர்ப்பாள் என்று எண்ணியிருக்கலாம். ஆனால் அவளோ அவளுடைய பெயருக்கு ஏற்றாற்போலவே அவனுடைய முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்தாள்.…

May

போகக்கூடாத இடம்

2023 மே 12  (வேத பகுதி: நியாயாதிபதிகள் 16,1 முதல் 3 வரை) “பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான்” (வசனம்  1). ஒரு நியாயாதிபதியாக சிம்சோன் இஸ்ரவேல் மக்களை நியாயம் விசாரித்தான். கடந்த காலத்தின் வெற்றியும், நிகழ்காலத்தின் புகழும் ஒரு மனிதனை தற்பெருமைக்கும், அதீத தன்னம்பிக்கைக்கும் நேராக வழிநடத்தக்கூடும். சுயபெலத்தை நம்பிச் செய்யக்கூடிய எந்தக் காரியமும் வருங்கால வெற்றிக்கு உத்திரவாதமில்லை என்பது சிம்சோனின் வாழ்க்கை நமக்குச் சொல்லிக்கொடுக்கும் பாடமாகும்.…

May

நினைவுகூரும் இடம்

2023 மே 11  (வேத பகுதி: நியாயாதிபதிகள் 15,18 முதல் 20 வரை) “அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு …” (வசனம் 18). சிம்சோன் தனியொருவனாய் பெலிஸ்தியர்களோடு போரிட்டு ஆயிரம் பேரைக் கொன்றான். போரினால் களைத்துப்போனான், இப்பொழுது அவனுக்கு களைப்பு நீங்க தண்ணீர் தேவை. யார் அவனுடைய தாகத்தைத் தீர்க்க முடியும்? அவனைக் கட்டி பெலிஸ்தியர்களிடம் கொண்டுவந்த யூதா கோத்திரத்தார் உதவுவார்களா? வாய்ப்பே இல்லை! எதிரிகளாகிய பெலிஸ்தியர்கள் உதவி செய்வார்களா? அதற்கும் சற்றேனும் வாய்ப்பு…

May

சரியானதை செய்ய நாடுவோம்

2023 மே 10 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 15,15 முதல் 17 வரை) “உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெழும்பைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம் பேரைக் கொன்றுபோட்டான்” (வசனம் 15). சிம்சோன் நசரேய விரதம் பூண்டவன். கர்த்தர் அவனை ஒரு சிறப்பான நோக்கத்துக்காகத் தெரிந்துகொண்டார். அவனுடைய வளர்ச்சியில் கர்த்தர் அக்கறை காட்டினார். அவன் சோராவுக்கும் எஸ்தாவோனுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளையத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் ஏவத் தொடங்கினார் என்று…

May

ஆவிக்குரிய விடுதலை

2023 மே 9 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 15,14) “அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்துபோயிற்று” (வசனம் 14). யூதாவின் மனிதர்கள் சிம்சோனை புதிய கயிறுகளினால் கட்டி, அவனை பெலிஸ்தியர்களிடம் லேகி என்ற இடம் வரைக்கும் கொண்டு சென்றார்கள். அவன் கட்டப்பட்ட நிலையில் வருகிறதைக் கண்ட பெலிஸ்தியர்கள் ஆரவாரம் பண்ணினார்கள். அவனுடைய சொந்த மக்களாலேயே வெற்றி நமக்குச் சாதகமாக…

May

ஆவிக்குரிய இருள்

2023 மே 8 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 15:9 முதல் 13 வரை) “பெலிஸ்தியர் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா? பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்?” (வசனம் 10). பெலிஸ்தியர்களின் மீதான பெரிய தாக்குதலுக்குப் பிறகு, சிம்சோன் ஏத்தாம் ஊரிலுள்ள கன்மலையின் பிளவிலே போய் தங்கினான் (வசனம் 14). இது பெலிஸ்தியர்களின் அடுத்த கட்ட நடவடிக்கையை எதிர்பார்த்துக் காத்திருத்தலே தவிர பயத்தின் வெளிப்பாட்டினால் அல்ல. அவன் அங்கே தங்கியிருந்தது யூதாவின் எல்லைக்குட்பட்ட பகுதி, அது அங்குள்ள…

May

மெய்யான ஒப்புரவாகுதல்

2023 மே 7 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 15,1 முதல் 8 வரை) “சில நாள் சென்றபின்பு, சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன் பெண்சாதியைக் காணப்போய்…” (வசனம் 1). சிம்சோன் கோபம் மூண்டவனாக தன் தந்தையின் வீட்டுக்குத் திரும்பிவிட்டான் என்று முந்தின அதிகாரம் முடிகிறது (நியாயாதிபதிகள் 14,19). சிம்சோன் தனக்கு மனைவியாக வரப்போகிறவளிடத்தில் உண்மையை எதிர்பார்த்தான். அவளோ தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, தன் கணவனைக் காட்டிக்கொடுத்தாள். தன் கணவன் சொன்ன ஒரு…

May

கிருபையின் ஆவியானவர்

2023 மே 6 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 14,19 முதல் 20 வரை) “கர்த்தருடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவன் அஸ்கலோனுக்குப்போய், அவ்வூராரில் முப்பதுபேரைக் கொன்று…” (வசனம் 19). சிம்சோனை இந்த உலகத்தில் தோன்றச் செய்தவர் கர்த்தர். அவனுக்கென்று சில பிரத்யேகக் குணங்களையும் கட்டுப்பாடுகளையும் அவர் கொடுத்திருந்தார். ஆனால் சிம்சோன் தன்னுடைய அழைப்பையும் மேன்மையையும் சரிவரப் புரிந்துகொள்ளாமற்போனான். தேவன் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி கிருபையைக் கூடுதலாக அவனுக்கு வழங்கினார். தொடர்ந்து அவனுக்காக வாய்ப்புகளை வழங்கிக் கொடுத்தார். “கர்த்தருடைய…