May

தன்னம்பிக்கைக்கு விழுந்த அடி

2023 மே 25 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 20,36 முதல் 48 வரை) “பென்யமீன் மனுஷரோ, தங்களுக்கு விக்கினம் நேரிட்டதைக் கண்டு திகைத்து, … ஓடிப்போனார்கள்” (வசனம் 41 முதல் 42). பென்யமீனியர் குற்றத்தைப் பாதுகாத்தனர், அதற்காகப் போரிட்டனர். இதன் விளைவு பேரழிவில் முடிந்தது. இவர்கள் தங்கள் உயிர்தப்பிக்க பாதுகாப்புத் தேடி வனாந்தர வழியாய் ஓடினர். தேவையில்லாமல் பல உயிர்கள் பலியாயின. அவர்கள் பாவத்தை தீர்க்கமாகவும், விரைவாகவும் கையாண்டிருந்தால் இத்தகைய விளைவைத் தடுத்திருக்கலாம். ஒரு லேவியனின் மறுமனையாட்டியின்…

May

உண்மையை உணரத் தவறுதல்

2023 மே 24 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 20,29 முதல் 35 வரை) “கர்த்தர் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பென்யமீனை முறிய அடித்தார்” (வசனம் 35). இஸ்ரவேல் மக்களுக்குப் பாடம் கற்பித்த கர்த்தருடைய கவனம் பென்யமீன் பக்கம் திரும்பியது. தன்னுடைய குற்றத்தையும், அகந்தையையும் உணர மறுத்த பென்யமீன் மக்களைக் கர்த்தர் சீர்திருத்த விரும்பினார். முதல் இரண்டு நாட்களில் நடைபெற்ற போரில் நாற்பதாயிரம் இஸ்ரவேல் வீரர்களைக் கொன்ற பென்யமீனியருக்கு அதீத தன்னம்பிக்கை உண்டாயிற்று. சின்ன மீனைப் போட்டு, பெரிய மீனைப்…

May

சுயத்துக்கு மரித்தல்

2023 மே 23 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 20,18 முதல் 27 வரை) “தேவனுடைய வீட்டுக்குப் போய்: எங்களில் யார் முந்திப் போய் பென்யமீன் புத்திரரோடு யுத்தம்பண்ண வேண்டும் என்று தேவனிடத்தில் விசாரித்தார்கள்” (வசனம் 18). தேவன் இறையாண்மையுள்ளவரும், சர்வவல்லமை கொண்டவருமாவார். அவர் எந்தவொரு காரியத்தையும் நிகழ்வையும் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவும், அதிலிருந்து மக்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பதற்காகவும் பயன்படுத்திக்கொள்வார். இந்த நிகழ்வின் வாயிலாக பென்யமீன் மக்களுக்கு மட்டுமல்ல, இஸ்ரவேல் மக்களுக்கும் பாடத்தைக் கற்றுக்கொடுக்க விரும்பினார். அவருக்கு நிகர்…

May

குற்றச்சாட்டை மறுத்தல்

2023 மே 22 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 20,11 முதல் 17 வரை) “பென்யமீன் புத்திரர் இஸ்ரவேல் புத்திரராகிய தங்கள் சகோதரரரின் சொல்லைக் கேட்கமனமில்லாமல்” (வசனம் 13). அனைத்து இஸ்ரவேல் புத்திரரும் இணைந்து, கிபியாவில் நடந்த இந்தப் பாவச்செயலுக்குக் காரணமான குற்றவாளிகள் கொல்லப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். ஆனால் கிபியாவின் மக்களாகிய பென்யமீனியர்களோ இந்தக் கோரிக்கைக்குச் செவிகொடுக்கவில்லை. மாறாக, அவர்களைக் காப்பாற்றுவதற்காக தங்கள் சொந்த இனத்தார் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களையெல்லாம் உதவிக்கு அழைத்தார்கள். குற்றத்தை ஒத்துக்கொள்வதற்கு அவர்களுக்கு…

May

பிரச்சினைகளைக் கையாளுதல்

2023 மே 21 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 20,1 முதல் 10 வரை) “அப்பொழுது தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கீலேயாத் தேசத்தாருடன் மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஏகோபித்து சபையாகக் கூடினார்கள்” (வசனம் 1). நியாயாதிபதிகள் காலத்தில் இதுவரை இல்லாத ஒன்று இப்பொழுது நிகழ்ந்தது. தாண் முதல் பெயர்செபா (காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை என்று சொல்லப்படுவது போல) வரையிலான மக்கள் அனைவரும் அதாவது கோத்திரங்களின் அதிபதிகள், தலைவர்கள், மற்றும் சண்டை செய்யக்கூடிய போர்வீரர்கள் ஆகிய…

May

கடைசிக் காலம்

2023 மே 20 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 19,1 முதல் 30 வரை) “இஸ்ரவேலில் ராஜா இல்லாத அந்நாட்களிலே, எப்பிராயீம் மலைகள் அருகே பரதேசியாய்த் தங்கின ஒரு லேவியன் இருந்தான்” (வசனம் 1). இஸ்ரவேலில் ராஜா இல்லாத அந்நாட்களில், எப்பிராயீமின் மலைகளின் அருகே ஒரு லேவியன் தங்கியிருந்தான். இவன் ஒரு நாடோடி.  கானான் தேசத்தில் லேவியர்களுக்கென்று தனிப்பட்ட வகையில் சுதந்தரம் கொடுக்கப்படவில்லையாயினும் அவர்கள் குடியிருக்கும்படி அடைக்கலப்பட்டணங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. கர்த்தரே இவர்களுடைய சுதந்தரம். இவர்களுடைய பணி ஆசரிப்புக்கூடாரத்துடன் தொடர்புடையது.…

May

வழிவிலகுதல்

2023 மே 19  (வேத பகுதி: நியாயாதிபதிகள் 18,7 முதல் 31 வரை) “தேவனுடைய ஆலயம் சீலோவாவிலிருந்த காலம் முழுவதும் அவர்கள் மீகா உண்டுபண்ணின சுரூபத்தை வைத்துக்கொண்டிருந்தார்கள்” (வசனம் 31). இஸ்ரவேல் மக்களுக்குள் கானான் தேசத்தில் தாண் கோத்திரத்தாருக்கு ஒதுக்கப்பட்ட பகுதி எமோரியர் வாழ்ந்த பகுதியாகும். எமோரியர் இவர்களை மலைப்பகுதியிலிருந்து சமவெளிப் பகுதிக்கு இறங்க விடாமல் நெருக்கி, அங்கேயே குடியிருக்கும்படி செய்துவிட்டார்கள். இப்பொழுது பெலிஸ்தியர்களின் அதிகாரமும் ஓங்கிவிட்டது. இரண்டு மாபெரும் எதிரிகள் இருக்கிறார்கள். கர்த்தர் மீது விசுவாசத்தால்…

May

திருப்தி இல்லாமை

 2023 மே 18  (வேத பகுதி: நியாயாதிபதிகள் 18,1 முதல் 6 வரை) “அந்நாட்களிலே இஸ்ரவேலிலே ராஜா இல்லை; தாண் கோத்திரத்தார் குடியிருக்கிறதற்கு, தங்களுக்குச் சுதந்தரம் தேடினார்கள்; அந்நாள்வரைக்கும் அவர்களுக்கு இஸ்ரவேல் கோத்திரங்களுக்கு நடுவே போந்த சுதந்தரம் கிடைக்கவில்லை” (வசனம் 1). “அந்நாட்களிலே இஸ்ரவேலிலே ராஜா இல்லை” என்ற கூற்றானது அவர்கள் கர்த்தரை ராஜாவாக ஏற்று நடக்கவில்லை என்பது மட்டுமின்றி, அவர்கள் கர்த்தரில் திருப்தியடையாமல் மனிதத் தலைமைத்துவத்துக்காக அலைபாய்ந்தார்கள் என்ற உண்மையையும் நமக்கு அறிவிக்கிறது. இராஜா இல்லை…

May

சொந்தவழியில் தேவனைத் தேடுதல்

 2023 மே 17  (வேத பகுதி: நியாயாதிபதிகள் 17,1 முதல் 13 வரை) “அந்நாட்களிலே இஸ்ரவேலிலே ராஜா இல்லை, அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்” (வசனம் 6). நியாயாதிபதிகளின் நூலின் இனிவரும் அதிகாரங்களில் சொல்லப்பட்ட பகுதிகள் இஸ்ரவேல் மக்களின் மிகப்பெரிய ஆவிக்குரிய சீர்கேட்டையும், வீழ்ச்சியையும் நமக்குத் தோலுரித்துக் காட்டுகின்றன. அவர்கள் ஓர் இனமாக கூட்டுச் சேர்ந்து எதிரிகளை எதிர்ப்பதிலிருந்து, ஒரு தனி மனிதனால் எதிரிகளை எதிர்க்கும் நிலைக்கு தாழ்ந்துபோனார்கள். இப்பொழுது அக்குடும்பங்களிலும் பக்தி குறைந்து, சீர்கேடு…

May

கிருபையால் விழித்தெழுதல்

2023 மே 16  (வேத பகுதி: நியாயாதிபதிகள் 16,31) “பின்பு அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரனைவரும் போய், அவனை எடுத்துக்கொண்டுவந்து, சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவே அவன் தகப்பனாகிய மனோவாவின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்” (வசனம் 31). சிம்சோன் தன்னுடைய மரணத்தின் இரகசியத்தைக் கண்டுகொண்ட பின்னர் மரித்தான். அவனுடைய வாழ்க்கையைப் போலவே அவனுடைய மரணமும் வித்தியாசமானதுதான். அவன் மரணத்தைக் கண்டு பயப்படவில்லை, ஆகவே அவன் மரணத்திலும் பேசப்பட்டான். நாமும் நம்முடைய மரணத்தின் இரகசியத்தையும் அதை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் அடைவோமானால்…