September

ஜெபிக்காவிட்டால் பாவம்

2023 செப்டம்பர் 12 (வேத பகுதி: 1 சாமுவேல் 12,19 முதல் 25 வரை) “நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்” (வசனம் 23). சாமுவேலின் விண்ணப்பத்தால் இடியுடன் கூடிய புயல் மழையால் மக்கள் பீதியடைந்தார்கள். இது கர்த்தருடைய உண்மையுள்ள வேலைக்காரனாகிய சாமுவேலின் விசுவாசத்திற்கு அவர் அளித்த அங்கீகாரம் என்றே கூற வேண்டும். சாமுவேலுக்கு மட்டுமின்றி, தம்முடைய உண்மையுள்ள மக்களின் விசுவாசமுள்ள ஜெபங்களுக்கு எப்பொழுதும் பதில் அளிக்கிறார். அவர்களுடைய விண்ணப்பத்துக்குப் பதில் அளிப்பதன் வாயிலாக…

September

வானத்திலிருந்து அடையாளம்

2023 செப்டம்பர் 11 (வேத பகுதி: 1 சாமுவேல் 12,16 முதல் 18 வரை ) “இப்பொழுது கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள்” (வசனம் 16). “இப்பொழுது கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள்” (வசனம்  16) தான் பேசியது கர்த்தருடைய வார்த்தைதான், தன்னுடைய சொந்த விருப்பத்தின்படியான பேச்சல்ல என்பதை உறுதிப்படுத்தும்படி ஓர் அடையாளத்தை அனுப்பும்படி சாமுவேல் கர்த்தரிடம் கேட்டான். கர்த்தரிடமிருந்து வருகிற ஓர்…

September

தெரிந்துகொள்ள உதவுதல்

2023 செப்டம்பர் 10 (வேத பகுதி: 1 சாமுவேல் 12,14 முதல் 15 வரை) “நீங்கள் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்களானால், கர்த்தருடைய கை உங்கள் பிதாக்களுக்கு விரோதமாயிருந்ததுபோல உங்களுக்கும் விரோதமாயிருக்கும்” (வசனம் 15). கர்த்தர் சவுலை இஸ்ரவேல் மக்களுக்கு ராஜாவாக நியமித்தாலும், நியாயாதிபதி என்னும் பொறுப்பை தான் துறந்தாலும், ஒரு தீர்க்கதரிசி என்ற நிலையில் தன்னுடைய ஆவிக்குரிய பணியை அவன் தொடர்கிறான். இந்தச் சாமுவேலைப் போலவே, நாம் ஒவ்வொருவரும் பிறருடைய ஆவிக்குரிய…

September

உயிர்மீட்சிக் கூட்டம்

2023 செப்டம்பர் 9 (வேதபகுதி: 1 சாமுவேல் 12:6-14) “இப்போதும் கர்த்தர் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் செய்துவந்த எல்லா நீதியான கிரியைகளைக்குறித்தும், நான் கர்த்தருடைய சந்நிதியில் உங்களோடே நியாயம் பேசும்படிக்கு நீங்கள் நில்லுங்கள்” (வச. 7). சாமுவேல் கில்காலில், கர்த்தருடைய சமூகத்தில் கூடியிருந்த மக்களிடத்தில், புதிய ராஜாவுக்கான முடிசூட்டு விழாவையும், தன்னுடைய ஓய்வையும் அறிவித்தபின், மூன்றாவதாக அவர்களுடைய ஆன்மீக புதுப்பித்தலுக்கான உயிர்மீட்சிக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். நியாயாதிபதிகள் காலமாயிருந்தாலும், ராஜாக்களின் காலமாக இருந்தாலும், மக்கள் கர்த்தருக்கு உண்மையாக இராவிட்டால்,…

September

ஊழியத்தில் உண்மை

2023 செப்டம்பர் 8 (வேதபகுதி: 1 சாமுவேல் 12:3-5) “இதோ, இருக்கிறேன்; கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக் குறித்துச் சாட்சி சொல்லுங்கள்” (வச. 3). சாமுவேல் விடைபெற்றுச் செல்லுவதற்கு முன், ஒரு தலைவன் என்ற முறையில் தான் உண்மையும் உத்தமுமாக நடந்துகொண்டதைக் குறித்து அறிக்கையிட்டான். இது ஓய்வுபெற்றுச் செல்லும் போது பேசுகிற சம்பிரதாயமான வெற்று வார்த்தைகள் அல்ல. மாறாக, மக்களுக்கு நேராக விடுக்கப்பட்ட சவால் நிறைந்த வார்த்தைகள். சாமுவேல் எந்த வகையிலும் மக்களை…

September

வழிவிட்டு விலகுதல்

2023 செப்டம்பர் 7 (வேதபகுதி: 1 சாமுவேல் 12:1-2) “இப்போதும் இதோ, ராஜாவானவர் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்துவருகிறார்; நானோ கிழவனும் நரைத்தவனுமானேன்; என் குமாரர் உங்களோடிருப்பார்கள்” (வச. 2). சாமுவேல் என்னும் கர்த்தருக்குப் பிரியமான மனிதன், கில்காலில் கூட்டப்பட்ட இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக தன்னுடைய சொற்பொழிவைத் தொடங்குகிறார். இந்த சொற்பொழிவு மூன்று காரியங்களை முன்வைத்தது: 1, முடிசூட்டு விழா, 2, உயிர்மீட்சிக் கூட்டம், 3, பிரிவு உபச்சார விழா. பவுல் என்னும் மாபெரும் தேவனுடைய மனிதன், மிலேத்துவில்…

September

எது மகிழ்ச்சி?

2023 செப்டம்பர் 6 (வேதபகுதி: 1 சாமுவேல் 11:14-15) “அப்படியே ஜனங்கள் எல்லாரும் கில்காலுக்குப் போய், அவ்விடத்திலே கர்த்தருடைய சந்நிதியில் சவுலை ராஜாவாக ஏற்படுத்தி(னார்கள்)” (வச. 15). ஒரு மாபெரும் வெற்றியின் வேளையில் சவுல் அரியணை ஏறினார். அவருடைய வெற்றி அவரது முடிசூட்டுதலுக்கான படிக்கட்டாக அமைந்தது. இந்த வெற்றி சவுலை ஒரு தலைவனாக ஆக்கியது. இஸ்ரவேல் நாட்டின் முதல் மன்னனாக சவுல் பதவியேற்றான். இந்த நாட்டின் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. முதல் ராஜாவும் அதன் குடிமக்களும்…

September

வெற்றியில் தாழ்மை

2023 செப்டம்பர் 5 (வேதபகுதி: 1 சாமுவேல் 11,2 முதல் 13 வரை) “அதற்குச் சவுல்: இன்றையதினம் ஒருவரும் கொல்லப்படலாகாது; இன்று கர்த்தர் இஸ்ரவேலுக்கு இரட்சிப்பை அருளினார் என்றான்” (வசனம் 13). ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் (மத்தேயு 5,3) என்று கர்த்தராகிய இயேசு கூறினார். நமக்கு எதிரான போரில் வெற்றி எவ்வளவு முக்கியமோ, அதைக் காட்டிலும் முக்கியமானது வெற்றிக்குப் பின்னர் எளிமையோடும் தாழ்மையோடும் நடந்துகொள்வது. சவுல் அம்மோனியர்களின் மீதான வெற்றியின் கிரீடத்தை ஆண்டவர் பாதத்தில் சமர்ப்பித்தான். மக்கள்…

September

கபடற்ற தன்மை

2023 செப்டம்பர் 4 (வேத பகுதி: 1 சாமுவேல் 11,9 முதல் 11 வரை) “ஸ்தானாபதிகள் வந்து யாபேசின் மனுஷரிடத்தில் அதை அறிவித்தார்கள்; அதற்கு அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்” (வசனம் 9). அம்மோனியர்களுக்குப் பயந்து, இக்காட்டான சூழ்நிலையில் பரிதவித்துக்கொண்டிருந்த யாபேசின் மக்களுக்கு, உங்களுக்கு உதவி செய்ய நாங்கள் இருக்கிறோம் என்ற செய்தி கிடைத்தவுடன் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். தங்களைக் காப்பாற்ற யாராவது இருக்கிறார்களா என்று காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு யாரோ ஒருவர் தங்களைக் காப்பாற்ற முன்வருகிறார் என்ற செய்தியே சந்தோஷமடையப்…

September

ஊழியங்களின் நோக்கம்

2023 செப்டம்பர் 3 (வேத பகுதி: 1 சாமுவேல் 11,7 முதல் 8 வரை) “அப்பொழுது கர்த்தரால் உண்டான பயங்கரம் ஜனத்தின்மேல் வந்ததினால், ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள்” (வசனம் 7). பரிசுத்த ஆவியானவர் சவுலின் மீது இறங்கியவுடன் அவன் கோபங்கொண்டவனாகி, ஒரு மாட்டைப் பிடித்து, துண்டுகளாக வெட்டி, இஸ்ரவேல் எல்லையெங்கும் அனுப்பினான் (வசனம் 6 முதல் 7). இது ஒரு செய்தியின் தீவிரத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கான அந்தக் காலத்திய ஏற்பாடு. ஒருவர்மீது பரிசுத்த ஆவியானவர் இறங்கியவுடன் அவருக்குக்…