மீண்டும் ஒரு வீழ்ச்சி
(வேதபகுதி: ஆதியாகமம் 9:18-29) “நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான், அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான்” (வச. 20,21). பெருவெள்ளத்தின் அழிவிலிருந்து தேவ கிருபையால் காப்பாற்றப்பட்ட பிறகும், பாவத்துக்கு எதிரான தேவனின் மிகப் பெரிய தீர்ப்பைப் கண்ட பிறகும், ஒரு புதிய உலகத்துக்கான ஆளுகையைப் பெற்ற பிறகும், தேவனுடைய அன்பான உடன்படிக்கையைப் பெற்ற பிறகும், ஒரு துரதிஷ்டமான சம்பவம் நடக்கும் என்று யார்தான் எண்ணியிருப்பார்? இனிமேல் மனிதர்கள் எவ்விதப் பாவமும் செய்யமாட்டார்கள்…