கோராகின் எதிர்க்குரல்
(வேதபகுதி: எண்ணாகமம் 16:36-50) “(ஆரோன்) செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்; அப்பொழுது வாதை நிறுத்தப்பட்டது” (வச. 48). இருவித தூபகலசங்கள்; ஒன்று தவறான நபர்களால் கையாளப்பட்ட கலசங்கள், மற்றொன்று உண்மையான ஆசாரியனால் பயன்படுத்தப்பட்ட கலசம். தூபகலசம் தூபம் காட்டுவதற்காக ஆசரிப்புக்கூடாரத்தில் பயன்படுத்தப்பட்டது. இது தேவனால் சுகந்த வாசனையாக ஏற்றுக் கொள்ளப்படுகிற கிறிஸ்துவின் மகிமைக்கு அடையாளமாயிருக்கிறது (யாத். 30:34-38). கோராகும் அவனைச் சேர்ந்தவர்களும் கர்த்தருடைய சமூகத்தில் தூபங்காட்டுவதற்காக பொறாமையால் கொண்டுவந்தார்கள். தவறான நபர்கள், தவறான கண்ணோட்டத்தில் தேவசமூகத்தில் வருவது…