முகங்கோணாமல் கொடுத்தல்
(வேதபகுதி: உபாகமம் 15:1-11) “தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்க வேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்” (வச. 11). “தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை” (வச. 11) என்ற பழைய ஏற்பாட்டுக் கட்டளைக்கு ஏற்ப, “தரித்திரர்கள் எப்பொழும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்” (மத். 26:11) என்று இயேசு கிறிஸ்துவின் வார்த்தை, இன்றைக்கும் நாம் ஏழைய எளியவர்களை நினைத்துக்கொள்ள வேண்டும், அவர்களுக்கு உதாரத்துவமான உதவிகளைச் செய்ய வேண்டும்…