யூதாவின் பரிந்துரை ஜெபம்
(வேதபகுதி: ஆதியாகமம் 44:18-34) “இளையவன் தன் சகோதரரோடேகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்” (வச. 33). வேதத்தில் சொல்லப்பட்டுள்ள சிறந்த பரிந்துரை விண்ணப்பங்களில் ஒன்று இந்தப் பகுதியில் யூதா ஏறெடுத்ததாகும். யோசேப்பை மீதியானியர்களுக்கு விற்பதில் யூதா முன்னிலை வகித்தான். ஆனால் இப்பொழுது அந்த யூதாவே தன் சகோதரர்களுக்காக யோசேப்பின் முன் நிற்கிறான். இந்த ஜெபத்தில் யூதாவின் அர்ப்பணிப்பையும், தன் சகோதரர்கள் அனைவருக்குள்ளும் அவன் உயர்ந்து நிற்பதையும் காண்கிறோம். யூதாவினுடைய மன்றாட்டின் விளைவாக, யோசேப்பு தன்னை முழுவதும் வெளிப்படுத்துவதற்கு இருந்த தடைகள்…