Genesis

மரணத்தின்மீது வெற்றி

2023 ஜனவரி 11 (வேத பகுதி: ஆதியாகமம் 50:1 முதல் 26 வரை) “தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, … ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்த தேசத்துக்குக் கொண்டுபோவார்” (வசனம் 24). ஒரு குடும்பத்தினுடைய அனைத்து முக்கியமான நிகழ்வுகளும் ஆதியாகம புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளன: பிறப்பு, திருமணம், மரணம். கடைசியாக இங்கே நாம் ஒரு பெரிய அடக்க ஆராதனையைக் காண்கிறோம். இது ஒரு சுழற்றி, நாமும் இந்தக் காரியங்களை கடந்து வரவேண்டி உள்ளது. எல்லாருக்கும் பொதுவானதாக இருக்கிற…

Genesis

யாக்கோபின் இறுதி விருப்பம்

2023 ஜனவரி 10 (வேத பகுதி: ஆதியாகமம் 49,29 முதல் 33 வரை)  “நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பொரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டு….” (வசனம் 29). ஆதியாகம புத்தகத்தில் ஆபிரகாமுக்கு அடுத்தபடியாக அதிகமான பகுதிகளில் இடம் பெற்ற ஒரு மாபெரும் தேவமனிதன் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. தாத்தா ஆபிரகாம், தந்தை ஈசாக்கு என்பவர்களோடு சேர்ந்து முற்பிதாக்களின் வரிசையில் வருகிற இந்த யாக்கோபு தன்னுடைய மரணத்துக்குப் பின் செய்ய…

Genesis

அவனவனுக்குரிய ஆசீர்வாதம்

2023 ஜனவரி 9 (வேத பகுதி: ஆதியாகமம் 49:1 முதல் 28 வரை)  “இவர்கள் எல்லாரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்; அவர்களுடைய தகப்பன் ஆசீர்வதிக்கையில், அவர்களுக்குச் சொன்னது இதுதான்; அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான்” (வசனம் 28). “யாக்கோபு தன் குமாரரை அழைத்து; நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன்” என்றான் (வசனம் 1). தேவனுடைய பள்ளியில் நூற்றி நாற்பத்தேழு ஆண்டுகள் கற்றுக்கொண்ட அனுபவம் மிக்க வயதுமுதிர்ந்த ஒரு தந்தையினுடைய வாக்குகள்…

Genesis

தேவனின் தத்துப் பிள்ளைகள்

(வேத பகுதி: ஆதியாகமம் 48:1 முதல் 22)  “… எப்பிராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள். … அவர்கள் தங்கள் தங்கள் சகோதரருடைய பேரால் அழைக்கப்பட்டு அவர்களுக்குரிய சுதந்தரத்தில் பங்குபெறுவார்கள்” (வசனம் 5,6). இந்தப் பகுதி, யோசேப்பின் இரண்டு குமாரர்களை யாக்கோபு தம்முடைய சொந்தப் பிள்ளைகளாக அங்கீகரித்த ஒரு தனித்துவமான சூழ்நிலையை நம் முன் கொண்டு வருகிறது. யாக்கோபு யோசேப்பை நோக்கி: “நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வரும்முன்னே உனக்கு எகிப்து தேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடையவர்கள்; ரூபன்…

Genesis

நம்பிக்கையுள்ள வாழ்க்கை

(வேத பகுதி: ஆதியாகமம் 47,27 முதல் 31)  “நான் என் பிதாக்களோடே படுத்துக்கொள்ள வேண்டும்; ஆகையால், நீ என்னை எகிப்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், அவர்களை அடக்கம்பண்ணியிருக்கிற நிலத்திலே என்னையும் அடக்கம்பண்ணு என்றான்” (வசனம் 30). இஸ்ரவேலர் எகிப்து தேசத்துக்கு வந்து பதினேழு ஆண்டுகள் கடந்துவிட்டன. இங்கே இவர்கள், விவசாயம் செய்தார்கள், மக்கள் தொகையிலும் பலுகிப் பெருகினார்கள். பஞ்ச காலத்தில் காப்பாற்றுவதற்காக மட்டுமல்ல, ஒரு நாடாக இருப்பதற்கு தகுதியாகும்படிக்கு மக்கள் தொகை அதிகரிக்கும்படியாகவும் தேவன் அவர்களை எகிப்துக்கு அழைத்து வந்தார்.…

Genesis

அனைத்தும் கிறிஸ்துவுக்கே

(வேத பகுதி: ஆதியாகமம் 47:13 முதல் 26)  “அந்த வருஷம் முடிந்தபின், மறுவருஷத்திலே அவர்கள் அவனிடத்தில் வந்து: பணமும் செலவழிந்து போயிற்று; எங்கள் ஆடுமாடு முதலானவைகளும் எங்கள் ஆண்டவனைச் சேர்ந்தது; எங்கள் சரீரமும் நிலமுமே ஒழிய, எங்கள் ஆண்டவனுக்கு முன்பாக மீதியானது ஒன்றும் இல்லை” (வசனம்  18). பஞ்ச காலத்தில் யோசேப்பின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டதாயிருந்தது. அவன் படிப்படியாக எகிப்து தேசத்தின் அனைத்துச் சொத்துகளையும், மக்களையும் தன்னுடைய அதிகாரத்துக்குக்கீழ் கொண்டுவந்தான். முதலாவது மக்கள் பணத்துக்காக தானியம் வாங்கினார்கள்,…

Genesis

யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தல்

(வேத பகுதி: ஆதியாகமம் 47:1 முதல் 12)  “யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான்” (வசனம்  7) “யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான்” என்ற வசனம் நம்மைச் சிந்திக்க வைக்கக் கூடியதும், ஆச்சயரிப்பட வைக்கக்கூடியதுமாய் இருக்கிறது. மேய்ப்பனான யாக்கோபு, அந்தக் காலத்தில், நாகரீகம் வளர்ந்ததும், உலகின் மாபெரும் சக்திவாய்ந்த சக்கரவர்த்தி ஒருவனைச் சந்தித்து, அவனை ஆசீர்வதித்தான். பெரும்பாலும் இதற்கு நேர்மாறான ஒன்றையே நாம் எதிர்பார்ப்போம், நாம் தலைவர்களால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்றே எதிர்பார்ப்போம். பார்வோன் யாக்கோபை ஆசீர்வதித்தால் என்ன நடந்திருக்கும்? அவனிடமிருக்கும்…

Genesis

எகிப்தில் சாட்சியை வெளிப்படுத்துதல்

 (வேத பகுதி: ஆதியாகமம் 46:5 முதல் 34)  “நீங்கள், கோசேன் நாட்டில் குடியிருக்கும்படி, அவனை நோக்கி: எங்கள் பிதாக்களைப்போல, உமது அடியாராகிய நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் மேய்ப்பர்களாயிருக்கிறோம் என்று சொல்லுங்கள்; மேய்ப்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள் என்றான்” (வசனம்  34). எகிப்து இந்த உலகத்துக்கு அடையாளமாயிருக்கிறது. இரட்சிக்கப்படாத இந்த உலகத்துக்கு நல்ல மேய்ப்பனாகிய கிறிஸ்துவின் பிள்ளைகள் ஆகாதவர்களாக இருக்கிறார்கள் என்பது ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல. இந்த  உலகம் கிறிஸ்துவைப் பகைக்கிறது, ஆகவே அது நம்மையும் பகைக்கிறது. நாம்…

Genesis

எகிப்துக்குப்போக பயப்பட வேண்டாம்

(வேத பகுதி: ஆதியாகமம் 46:1 முதல் 4)  “அப்பொழுது அவர்: நான் தேவன் நான் உன் தகப்பனுடைய தேவன்; நீ எகிப்து தேசத்துக்குப் போகப் பயப்பட வேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்” (வசனம் 3). யோசேப்பின் அழைப்பை ஏற்று யாக்கோபு எகிப்துக்குச் செல்லுமுன் அவன் பெயர்செபாவுக்குச் சென்று தன் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுக்குப் பலியிட்டான் (வசனம் 1). விசுவாசிகளாகிய நாம் ஒவ்வொருவரும் இந்த உலகத்தில் வசிக்கிறோம். இந்த உலக மக்களோடு பழகுதல், வேலை செய்தல் என்று…

Genesis

என் மீட்பர் உயிரோடிருக்கிறார்

(வேத பகுதி: ஆதியாகமம் 45,16 முதல் 28) “அப்பொழுது இஸ்ரவேல்: என் குமாரனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்” (வசனம் 28). யோசேப்பு தன்னுடைய சகோதரர்களால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பார்வோனிடமோ அல்லது எகிப்தியர்களிடமோ இதுவரை எதுவும் சொல்லவில்லை அல்லது முறையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே பிரிந்த குடும்பம் ஒன்றுசேர்வதைக் குறித்து பார்வோனும் அவனுடைய ஊழியர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். உண்மை தெரிந்திருந்தால் அந்தக் காட்சி எப்படி இருந்திருக்கும்!…