December

யூதாவின் பரிந்துரை ஜெபம்

(வேதபகுதி: ஆதியாகமம் 44:18-34) “இளையவன் தன் சகோதரரோடேகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்” (வச. 33). வேதத்தில் சொல்லப்பட்டுள்ள சிறந்த பரிந்துரை விண்ணப்பங்களில் ஒன்று இந்தப் பகுதியில் யூதா ஏறெடுத்ததாகும். யோசேப்பை மீதியானியர்களுக்கு விற்பதில் யூதா முன்னிலை வகித்தான். ஆனால் இப்பொழுது அந்த யூதாவே தன் சகோதரர்களுக்காக யோசேப்பின் முன் நிற்கிறான். இந்த ஜெபத்தில் யூதாவின் அர்ப்பணிப்பையும், தன் சகோதரர்கள் அனைவருக்குள்ளும் அவன் உயர்ந்து நிற்பதையும் காண்கிறோம். யூதாவினுடைய மன்றாட்டின் விளைவாக, யோசேப்பு தன்னை முழுவதும் வெளிப்படுத்துவதற்கு இருந்த தடைகள்…

December

சகோதரர்களின் மனமாற்றம்

(வேதபகுதி: ஆதியாகமம் 44:1-17) அதற்கு யூதா: என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் … எதினால் எங்கள் நீதியை விளங்கப் பண்ணுவோம்? உம்முடைய அடியாரின் அக்கிரமத்தை தேவன் விளங்கப்பண்ணினார் ” (வச. 16). யோசேப்பின் சகோதரர்களின்மீது போடப்பட்ட வலை இறுகியது. சரியான வழியைத் தெரிந்துகொள்ளக்கூடிய பலவழிச் சாலைகளின் சந்திப்பில் நிற்கிறார்கள். யோசேப்பு விரித்த வலையில் அவர்கள் சிக்கினார்கள். அவர்கள் முன்பாக இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. யோசேப்பை விற்றுவிட்டு, துஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப் போட்டது என்று தந்தையிடம் பொய் கூறியதை ஒத்துக்கொள்ள…

December

கிறிஸ்து நம்முடைய மத்தியஸ்தர்

(வேதபகுதி: ஆதியாகமம்43:16-34) “யோசேப்பின் உள்ளம் தன் சகோதரனுக்காகப் பொங்கினபடியால், அவன் அழுகிறதற்கு இடம் தேடி, துரிதமாய் அறைக்குள்ளே போய், அங்கே அழுதான்” (வச. 30). யோசேப்பின் எண்ணமெல்லாம் தன் சகோதரர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதாகவே இருந்தது. தன் தந்தையையும் தன் உடன் பிறந்த சகோதரனையும் காண வேண்டும், அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது பற்றியே இருந்தது. யோசேப்பு அவர்களை விருந்துக்கு அழைத்து சந்தோஷப்படுத்த விரும்பினான். ஆனால் சகோதரர்களுடைய எண்ணெமெல்லாம் யோசேப்பு தங்களை சிறையில் தள்ளி அடிமையாக்கி…

December

யூதா: உத்தரவாதி

(வேதபகுதி: ஆதியாகமம் 43:1-15) நீதிமொழிகள் புத்தகத்தில் சாலொமோன் ராஜா பிணை கொடுப்பதைப் பற்றி ஒரு முக்கியமான கருத்தை எழுதியிருக்கிறார். “அந்நியனுக்காகப் பிணைக்கப்படுகிறவன் வெகு பாடுபடுவான் (நீதி. 11:15). சாலமோன் எல்லாவற்றையும் ஆய்வுக் கண்ணோட்டத்தில் காண்பவர். மனித இயல்பைப் புரிந்துகொண்ட இவர், எவ்வளவு அதிகமாக யோசித்தாலும், பிணை கொடுப்பவர் எப்போதும் பாதிப்படைய நேரிடும் என்றும், இழப்பை சந்திக்க வேண்டியது வரும் என்றும் உணர்ந்து எழுதினார். இத்தகைய நிலையிலும் ஒரு மனிதன் பிணை அளிக்க முன்வந்திருப்பதைப் பார்ப்பது மிகவும் வியப்பாக…

December

அறியாமமையினால் வரும் பயம்

(வேதபகுதி: ஆதியாகமம் 42:25-38) “யாக்கோபு அவர்களை நோக்கி: … இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது என்றான்” (வச. 36). யோசேப்பு தொடர்ந்து தன் சகோதரர்களுடன் இடைபடுகிறான். தன் சகோதரர்களுக்கு தானியமும் கொடுத்து, பணத்தையும் அவர்களுடைய பையில் போட்டுவிட்டான். இதன் மூலம் தன் சகோதரர்களின் செயலை நிதானிக்க முயலுகிறான். முன்னொரு நாளில் யோசேப்பை அவர்கள் பணத்துக்காக விற்றார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது என்று வேதம் கூறுகிறது. இப்போது சாக்கில் இருக்கிற பணத்தை அவர்கள் என்ன செய்ய…

December

பிழைகளை உணருதல்

(வேதபகுதி: ஆதியாகமம் 42:7-24) “நீங்கள் நிஜஸ்தரானால் சகோதர ராகிய உங்களில் ஒருவன் காவற்கூடத்தில் கட்டுண்டிருக்கட்டும்” (வச. 19) இளைய மகன் தூர தேசத்தில் உணவுக்காக கஸ்டப்படும் போது தான் அவனுக்கு புத்தி வந்தது என்று படிக்கிறோம் (லூக்கா 15). நம்முடைய குறைவுகள் சில நேரங்களில் நம்மை யதார்த்த நிலைக்கு திரும்ப வைக்கின்றன. யாக்கோபு தனக்கு திறமை இருக்கும் வரை தன் சுய முயற்சியில் போராடினான். வேறு வழி இல்லாமல் போனபோது கர்த்தரிடம் முற்றிலும் சரணாகதி அடைந்தான். இப்பொழுது…

December

பெத்லகேமில் பிறந்த உலக இரட்சகர்

(வேதபகுதி: ஆதியாகமம் 42:1-6) “நாம் சாகாமல் உயிரோடிருக்கும்படி நீங்கள் நீங்கள் அவ்விடத்துக்கு போய் நமக்காகதானியம்கொள்ளுங்கள்என்றான்” (வச. 2). எகிப்தில் தானியம் உண்டு என்கிற செய்தி யாக்கோபுக்கு, “தூர தேசத்தில் இருந்தது வரும் நற்செய்தி விடாய்த்த அதுமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானமாக (நீதி. 25:25) இருந்தது. இந்த பஞ்சம் ஏன் வந்தது என்று நாம் யோசிபோமானால், சகல தேசத்தாரும் யோசேப்பின் நற்குணத்தை அறிவதற்கும், அவனுடைய கனவு நிறைவேறுவதற்கும், யாக்கோபின் குடும்பத்தார் காப்பாற்றப்படுவதற்குமே ஆகும். தேவனுடைய பிள்ளைகளுக்கு சலமும்…

December

சாப்நாத்பன்னேயா: உலக இரட்சகர்

(வேதபகுதி: ஆதியாகமம் 41:37-57) “பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு, ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்” (வச. 45). கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும்; செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும். யோசேப்பின் பதிமூன்று ஆண்டுகள் சிறைவாசமும், அடிமை வாழ்வும் முடிவுக்கு வந்தது. கனிதரும் திராட்சைச் செடியாய் இப்பொழுது யோசேப்பு பலன் கொடுக்கத் தொடங்குகிறான். முப்பது வயதில் எகிப்தின் பிரதம மந்திரியானான். கிறிஸ்து இஸ்ரயேலின் ராஜாவாக வருவார் என்று நம்பிக்கையுடன்,…

December

கிறிஸ்துவே நமக்கு ஞானம்

(வேதபகுதி: ஆதியாகமம் 41:1-36) “இந்தக் காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது” (வச. 32). சிறையிலிருந்தும், அடிமைதனத்திலிருந்தும் விடுதலை பெற்றவர் ஒரே நாளில் உலகின் சக்திவாய்ந்த ஆட்சியாளராக மாறும் கதாபாத்திரங்கள் புனைகதைகளில்கூட மிகமிகக் குறைவு. ஆனால் இறையாண்மையுள்ள தேவனின் கதையில் இத்தகைய ஒரு பாத்திரத்தை யோசேப்பு வகிக்கிறார். சகோதரர்களால் வெறுக்கப்பட்ட ஒருவன், பொய்யாய்க் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவன் எகிப்தை ஆட்சி செய்யும் ஆளுநராய் மாறுகிறான். பார்வோன் தன் கனவால் கலக்கமடைந்தான். இது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றிய கவலை. இன்றைக்கு…

December

பாடுகளில் பரமன் சேவை

(வேதபகுதி: ஆதியாகமம் 40:1-23) “பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் மறந்துவிட்டான்” (வச. 23). யோசேப்பு கண்ட கனவுகள் என்னவாயிற்று? இப்பொழுது அவன் சிறைச்சாலையில் அல்லவா இருக்கிறான். ஒருநாள் தன்னுடைய கனவுகள் உண்மையாகும் என்ற நம்பிக்கையோடு யோசேப்பு இருந்தான். இந்த நம்பிக்கையே சிறையில் அவன் உண்மையோடு உழைப்பதற்குக் கற்றுக் கொடுத்தது. சிறைக்கு இரு புதிய நபர்கள் வருகிறார்கள். அவர்கள் அரண்மனை அதிகாரிகள். அவர்களுடைய குற்றம் என்ன? அதன் விவரங்களை நாம் அறியோம்! குற்றம் நிரூபிக்கப்படாத விசாரணைக் கைதிகளாக உள்ளே…