பாடுகளில் பரமசந்தோஷம்
(வேதபகுதி: ஆதியாகமம் 39:1-23) “கர்த்தர் யோசேப்போடே இருந்தார்” (வச. 2). யோசேப்பை விலைகொடுத்து வாங்கிய இஸ்மவேலர் அவனை எகிப்து நாட்டின் தலையாரிகளுக்கு அதிபதியான போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள். யோசேப்பின் பலவண்ண அங்கி உரியப்பட்டது. இப்பொழுது ஒரு வேலைக்காரனுக்குரிய ஆடையை அணிந்திருக்கிறான். வேலை என்றால் என்னவென்பதை தேவன் அவனுக்குக் கற்றுக்கொடுக்கிறார். தாழ்மையையும், கீழ்ப்படிதலின் முக்கியத்துவத்தையும் இந்த வழியில்தான் தேவன் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். “இளைஞரே மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள்; நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்” என்று பேதுரு ஆலோசனை கூறுகிறார்.…