பாடுகளில் பரமன் சேவை
(வேதபகுதி: ஆதியாகமம் 40:1-23) “பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் மறந்துவிட்டான்” (வச. 23). யோசேப்பு கண்ட கனவுகள் என்னவாயிற்று? இப்பொழுது அவன் சிறைச்சாலையில் அல்லவா இருக்கிறான். ஒருநாள் தன்னுடைய கனவுகள் உண்மையாகும் என்ற நம்பிக்கையோடு யோசேப்பு இருந்தான். இந்த நம்பிக்கையே சிறையில் அவன் உண்மையோடு உழைப்பதற்குக் கற்றுக் கொடுத்தது. சிறைக்கு இரு புதிய நபர்கள் வருகிறார்கள். அவர்கள் அரண்மனை அதிகாரிகள். அவர்களுடைய குற்றம் என்ன? அதன் விவரங்களை நாம் அறியோம்! குற்றம் நிரூபிக்கப்படாத விசாரணைக் கைதிகளாக உள்ளே…