Genesis

பெத்லகேமில் பிறந்த உலக இரட்சகர்

(வேதபகுதி: ஆதியாகமம் 42:1-6) “நாம் சாகாமல் உயிரோடிருக்கும்படி நீங்கள் நீங்கள் அவ்விடத்துக்கு போய் நமக்காகதானியம்கொள்ளுங்கள்என்றான்” (வச. 2). எகிப்தில் தானியம் உண்டு என்கிற செய்தி யாக்கோபுக்கு, “தூர தேசத்தில் இருந்தது வரும் நற்செய்தி விடாய்த்த அதுமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானமாக (நீதி. 25:25) இருந்தது. இந்த பஞ்சம் ஏன் வந்தது என்று நாம் யோசிபோமானால், சகல தேசத்தாரும் யோசேப்பின் நற்குணத்தை அறிவதற்கும், அவனுடைய கனவு நிறைவேறுவதற்கும், யாக்கோபின் குடும்பத்தார் காப்பாற்றப்படுவதற்குமே ஆகும். தேவனுடைய பிள்ளைகளுக்கு சலமும்…

Genesis

சாப்நாத்பன்னேயா: உலக இரட்சகர்

(வேதபகுதி: ஆதியாகமம் 41:37-57) “பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு, ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்” (வச. 45). கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும்; செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும். யோசேப்பின் பதிமூன்று ஆண்டுகள் சிறைவாசமும், அடிமை வாழ்வும் முடிவுக்கு வந்தது. கனிதரும் திராட்சைச் செடியாய் இப்பொழுது யோசேப்பு பலன் கொடுக்கத் தொடங்குகிறான். முப்பது வயதில் எகிப்தின் பிரதம மந்திரியானான். கிறிஸ்து இஸ்ரயேலின் ராஜாவாக வருவார் என்று நம்பிக்கையுடன்,…

Genesis

கிறிஸ்துவே நமக்கு ஞானம்

(வேதபகுதி: ஆதியாகமம் 41:1-36) “இந்தக் காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது” (வச. 32). சிறையிலிருந்தும், அடிமைதனத்திலிருந்தும் விடுதலை பெற்றவர் ஒரே நாளில் உலகின் சக்திவாய்ந்த ஆட்சியாளராக மாறும் கதாபாத்திரங்கள் புனைகதைகளில்கூட மிகமிகக் குறைவு. ஆனால் இறையாண்மையுள்ள தேவனின் கதையில் இத்தகைய ஒரு பாத்திரத்தை யோசேப்பு வகிக்கிறார். சகோதரர்களால் வெறுக்கப்பட்ட ஒருவன், பொய்யாய்க் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவன் எகிப்தை ஆட்சி செய்யும் ஆளுநராய் மாறுகிறான். பார்வோன் தன் கனவால் கலக்கமடைந்தான். இது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றிய கவலை. இன்றைக்கு…

Genesis

பாடுகளில் பரமன் சேவை

(வேதபகுதி: ஆதியாகமம் 40:1-23) “பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் மறந்துவிட்டான்” (வச. 23). யோசேப்பு கண்ட கனவுகள் என்னவாயிற்று? இப்பொழுது அவன் சிறைச்சாலையில் அல்லவா இருக்கிறான். ஒருநாள் தன்னுடைய கனவுகள் உண்மையாகும் என்ற நம்பிக்கையோடு யோசேப்பு இருந்தான். இந்த நம்பிக்கையே சிறையில் அவன் உண்மையோடு உழைப்பதற்குக் கற்றுக் கொடுத்தது. சிறைக்கு இரு புதிய நபர்கள் வருகிறார்கள். அவர்கள் அரண்மனை அதிகாரிகள். அவர்களுடைய குற்றம் என்ன? அதன் விவரங்களை நாம் அறியோம்! குற்றம் நிரூபிக்கப்படாத விசாரணைக் கைதிகளாக உள்ளே…

Genesis

பாடுகளில் பரமசந்தோஷம்

(வேதபகுதி: ஆதியாகமம் 39:1-23) “கர்த்தர் யோசேப்போடே இருந்தார்” (வச. 2). யோசேப்பை விலைகொடுத்து வாங்கிய இஸ்மவேலர் அவனை எகிப்து நாட்டின் தலையாரிகளுக்கு அதிபதியான போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள். யோசேப்பின் பலவண்ண அங்கி உரியப்பட்டது. இப்பொழுது ஒரு வேலைக்காரனுக்குரிய ஆடையை அணிந்திருக்கிறான். வேலை என்றால் என்னவென்பதை தேவன் அவனுக்குக் கற்றுக்கொடுக்கிறார். தாழ்மையையும், கீழ்ப்படிதலின் முக்கியத்துவத்தையும் இந்த வழியில்தான் தேவன் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். “இளைஞரே மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள்; நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்” என்று பேதுரு ஆலோசனை கூறுகிறார்.…

Genesis

கிருபையைப் பெற்ற தாமார்

(வேதபகுதி: ஆதியாகமம் 38:1-30) “யூதா அவைகளைப் பார்த்தறிந்து: என்னிலும் அவள் (தாமார்) நீதியுள்ளவள்; அவளை என் குமாரனாகிய சேலாவுக்கு கொடாமற்போனேனே என்றான்” (வச. 26). யூதாவின் வாயிலாகத் தாமார் நமக்கு அறிமுகமாகிறாள். யூதா தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சுயாதீனமாக வாழச் செல்கிறான். தனக்கும், தன்னுடைய மகன்களுக்கும் கானானியப் பெண்களை வாழ்க்கைத் துணையாகத் தேடிக்கொள்கிறான். யூதாவின் குடும்பத்தில், வாக்குத்தத்தத்துக்குச் சொந்தமானவர்களோ கர்த்தருடைய பார்வையில் பொல்லாதவர்களாய் நடந்துகொண்டிருக்க, புறஇனப் பெண்ணான தாமாரோ தனக்குக் கிடைக்கப்பட்ட வெளிச்சத்தில் நீதியுள்ளவளாக விளங்கினாள்.…

Genesis

அவனை விற்றுவிடுவோம்

(வேதபகுதி: ஆதியாகமம் 37:18-43) “அவர்கள் அந்தக் குழியிலிருந்து யோசேப்பைத் தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள்” (வச. 8). யோசேப்பு தனது சகோதரர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கும்படி அவரது தந்தையால் அனுப்பப்பட்டார். இது ஓர் அன்பின் பணியாக இருந்தது. ஆனால் அவனுடைய சகோதரர்களோ அவனை வெகு தொலைவில் வரும்போதே பார்த்து, அவனைக் கொல்லத் திட்டமிட்டனர். ஏனெனில் யோசேப்பின் கனவு மற்றும் அதனால் அவனுக்கு ஏற்பட்ட பெருமை அவர்களை வெறுப்பால் நிரப்பியிருந்தது. திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி,…

Genesis

யாக்கோபின் வரலாறு

(வேதபகுதி: ஆதியாகமம் 37:1-17) “இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.” (வச. 3). யாக்கோபினுடைய சந்ததியினுடைய வரலாறு இங்கே யோசேப்புடன் தொடங்குகிறது. தேவனுடைய இறையாண்மைக்கும் ஆளுகைக்கும் கீழாக நடைபெற்ற ஓர் அற்புதமான ஆனால் சோகமும் சந்தோஷமும் நிறைந்த கதை யோசேப்பினுடையது. பழைய ஏற்பாடு கூறும் பரிசுத்தவான்களில் யோசேப்பைப் போல இயேசு கிறிஸ்துவை இவ்வளவு நெருக்கமாகப் பிரதிபலிக்கும் நபர் வேறு எவரும் இல்லை…

Genesis

ஏதோமியரின் வரலாறு

(வேதபகுதி: ஆதியாகமம் 36:1-43) “ஆதலால் ஏசா சேயீர் மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்றும் பெயர்” (வச. 8). ஏமாற்றுக்காரனாக இருந்த யாக்கோபு தேவனுடைய பிரபு என்னும் பொருளில் இஸ்ரயேல் என்று பெயர் மாற்றப்பட்டான். ஆனால் இதற்கு முரண்பட்ட வகையில் ஏசாவின் பெயர் ஏதோம் என்றாயிற்று. அவனுடைய சந்ததியார் ஏதோமியர் என்று அழைக்கப்பட்டனர். ஏதோம் என்றால் சிவப்பு. ஒரு கோப்பை சிவப்பான கூழுக்காகத் தலைமகன் என்னும் சிறப்புரிமையை விற்றுப்போட்டதன் நினைவாக ஏசா இவ்வாறு அழைக்கப்படலானான். காலங்காலமாக ஓர்…

Genesis

நான்கு கல்லறைகள்

(வேதபகுதி: ஆதியாகமம் 35:1-29) “தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப்போய் அங்கே குடியிருந்து… அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார்” (வச. 2). தேவன், யாக்கோபை பெத்தேலுக்குச் செல்லும்படி கூறினார். தன்னுடைய பிள்ளைகளால் சாட்சியை இழந்து, சுற்றத்தாரின் கோபத்துக்கு ஆளாகி நிற்கும் யாக்கோபுக்கு, முன்னமே தனக்குத் தரிசனமாகி வாக்குறுதியைப் பெற்ற இடத்துக்குத் திரும்பிச் சென்று தன்னைப் புதுப்பித்துக்கொள்வதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை. தான் மட்டுமின்றி தன் குடும்பத்தார் அனைவரையும் கர்த்தருக்குள்ளாக மாற்ற வேண்டும்…