எல்லை தாண்டாதிருக்க ஒப்பந்தம்
(வேதபகுதி: ஆதியாகமம் 31:22-55) “இப்பொழுதும் எனக்கும் உனக்கும் சாட்சியாயிருக்கும்பொருட்டு, நீயும் நானும் உடன்படிக்கை பண்ணிக்கொள்ளக்கடவோம் என்றான்” (வச. 44). யாக்கோபு தனியொருவனாக ஆரானுக்கு வந்தான், இப்போது மனைவிகள், பிள்ளைகள், வேலையாட்கள் மற்றும் மிகப்பெரிய கால்நடைகள் ஆகியவற்றுடன் ஒரு செல்வந்தனாக, தன் மாமனாருக்குத் தெரியாமல் ஆரானைவிட்டுச் செல்கிறான். யாக்கோபின் இருபது ஆண்டுகள் படிப்பினையின் காலம் முடிவுக்கு வந்தது. ஆயினும் கர்த்தருக்கு முழுமையாக ஒப்புவிக்க வேண்டிய காரியம் மிச்சமிருந்தது. யாக்கோபின் பார்வையில் லாபான் ஓர் ஏமாற்றுக்காரன், லாபானின் பார்வையில் யாக்கோபு…