விசுவாசிகளின் நீதியாயிருக்கிற கிறிஸ்து
(வேதபகுதி: யாத்திராகமம் 29:1-9) “அந்த வஸ்திரங்களை எடுத்து, ஆரோனுக்கு உள்சட்டையையும், ஏபோத்தின் கீழ் அங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் தரித்து, ஏபோத்தின் விசித்திரமான கச்சையையும் அவனுக்குக் கட்டி …” (வச. 5). ஆரோன் கிறிஸ்துவுக்கு நிழலாக இருக்கிறான். இங்கே ஆரோனும் அவனுடைய குமாரரும் இணைத்துச் சொல்லப்பட்டுள்ளனர். இயேசு கிறிஸ்துவும் நாமும் இணைந்தே என்றென்றைக்குமாக இருப்போம் என்பதற்கு இது நல்லதோர் அடையாளமாயிருக்கிறது. பரலோகத்திலுள்ள மகா பிரதான ஆசாரியரான கிறிஸ்துவுடனான உறவின் காரணமாக, விசுவாசிகள் தேவனுக்குத் துதி செலுத்துவதில் அவருடன் இணைந்திருக்கிறார்கள்.…