மோசேயின் பிரிவுப் பிரசங்கம்
(வேதபகுதி: உபாகமம் 31:1-13) “இன்று நான் நூற்றிருபது வயதுள்ளவன்; இனி நான் போக்கும் வரத்துமாயிருக்கக்கூடாது” (வச. 2). இந்தப் பகுதி சூரிய அஸ்தமனத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையிலான ஓர் இணைப்பாகும். தேவன் தம்முடைய உண்மையான ஊழியக்காரனை அடக்கம் செய்யப்போகிறார், ஆயினும் தம்முடைய பணியைத் தொடர்கிறார். மரணம் தவிர்க்க முடியாதது. ஆனால் நித்திய தேவன் உடன் இருக்கிறார். எண்பது ஆண்டுகளுக்கு முன்பாக மோசே தன்னுடைய இனத்தாரை விடுவிக்க முயற்சி எடுத்தார். இன்றைக்கு அதைச் சாதித்துவிட்டார். அன்றைக்கு பார்வோனின் அரண்மனைச்…