சுதந்தரத்தைக் கட்டிக்காத்த சகோதரரிகள்
(வேதபகுதி: எண்ணாகமம் 36:1-13) “கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செலோப்பியாத்தின் குமாரத்திகள் செய்தார்கள்” (வச. 10). தேவன் ஒரு நாட்டுக்காக மட்டும் கரிசனையுள்ள தேவனல்ல, குடும்பங்களின்மீதும், தனிப்பட்ட நபர்களின்மேலும் அக்கறையுள்ள தேவனாக இருக்கிறார். தந்தையற்ற, சகோதரர்கள் யாருமில்லாத செலோப்பியாத்தின் மகள்களான, மக்லாள், திர்சாள், ஒக்லாள், மில்காள், நோவாள் ஆகியோரின் மேலும் தேவன் கவனம் வைக்கிறார். இவர்களுக்கு உரிய சுதந்தரத்தை அளித்து இவர்களுக்கான உரிமையை நிலைநாட்டினார். ஆதரவற்ற பெண்கள், விதவைகள், திக்கற்ற பெண்கள் ஆகியோரின்மேல் தேவன் சிறப்பான கவனம் செலுத்துகிறார்.…