உன்னத தேவனின் உயரிய எதிர்பார்ப்பு
(வேதபகுதி: லேவியராகமம் 27:14-34) “இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி கர்த்தர் சீனாய் மலையில் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே” (வச. 34). ஆசரிப்புக் கூடாரத்தில் செலுத்தப்படும் பலிகள் பற்றிய கட்டளைகளுடன் தொடங்குகிற இந்நூல், அவரால் மீட்டுக்கொள்ளப்பட்ட மக்களின் உற்சாகம் நிறைந்த விசேஷ பொருத்தனைகளுடன் முடிவடைகிறது. நம்மை ஆண்டவருக்கு பொருத்தனையாகப் படைப்பது மட்டுமின்றி, நம்முடைய விலங்குகளோ, வீடுகளோ, நிலங்களோ அவற்றையும் அவருடைய நாமத்துக்கு மகிமையாகப் பொருத்தனையாகப் படைக்கலாம். இவை அவரை ஆராதிக்கக்கூடிய நம்முடைய பார்வையை அதிகரிக்குமானால், தேவனுடைய திட்டங்களுக்கும் நோக்கங்களுக்கும்…