பிள்ளைகளின் சாட்சி
(வேதபகுதி: ஆதியாகமம் 34:1-31) “அப்பொழுது யாக்கோபு… இந்தத் தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப்பண்ணினீர்கள்” (வச. 30). ஒரு விசுவாசி தன்னுடைய புதிய மறுபிறப்பின் வாழ்க்கையை இந்த உலகத்தில் தொடர்ந்து சாட்சியுடன் தக்கவைத்துக்கொள்வது எவ்வளவு முக்கியமானது. அதுவும் பிள்ளைகளை இந்த உலகத்துடன் கலந்துவிடாமலும், பிரித்தெடுக்கப்பட்டவர்களாகவும் விசுவாசத்துக்குரியவர்களாகவும், பயபக்திக்குரியவர்களாகவும் வளர்ப்பது ஒரு சவால் நிறைந்த பணியாகவே இருக்கிறது. பிள்ளைகள் பெற்றோரை அன்றாடம் கவனிக்கிறார்கள். பெற்றோரின் செயல்கள் அவர்களிடத்தில் தாக்கத்தை உண்டுபண்ணுகின்றன. யாக்கோபு…