யாக்கோபின் ஜெபம்
(வேதபகுதி: ஆதியாகமம் 32:1-12) “யாக்கோபு பிரயாணம்பண்ணுகையில், தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள்” (வச. 1). யாக்கோபு பிரயாணம்பண்ணுகையில், தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள் என்ற செய்தி யாக்கோபின் விசுவாசப் பாதையில் மற்றொரு முக்கியமான தருணமாக விளங்குகிறது. ஏற்கனவே லாபானுடன் தரிசனத்தில் தோன்றி, யாக்கோபைக் காப்பாற்றிய தேவன், இப்பொழுது அவனுடைய நம்பிக்கையை வலுப்படுத்தவும், தைரியப்படுத்தவும் ஊக்கப்படுத்தவும் ஏசாவைச் சந்திப்பதற்கு முன்னதாகவே தூதர்கள் அவனைச் சந்திக்கும்படி அனுப்புகிறார். அவன் தூதர்களை தூரத்தில் காணவில்லை, மாறாக, அவர்களை அருகருகே சந்தித்தான். காணாமற்போன இளையகுமாரன் திரும்பி…