Genesis

தொழுகையின் முக்கியத்துவம்

(வேதபகுதி: ஆதியாகமம் 26:23-35) “நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்” (வச. 28). ஈசாக்கு ரெகொபோத்திலிருந்து தன்னுடைய தந்தை ஆபிரகாம் கர்த்தரைத் தொழுதுகொண்ட இடமாகிய பெயெர்செபாவுக்குக் குடிபெயர்ந்தான். கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட மக்களின் அடுத்த நகர்வு அவரைத் தொழுதுகொள்வதாக இருக்க வேண்டும். ஈசாக்கின் எண்ணங்களைக் கர்த்தர் அறிந்துகொண்டார். உலக மக்களிடமிருந்து பாதுகாப்பு கர்த்தரின் கரத்திலேயே இருக்கிறது என்பதை ஈசாக்கும் அறிந்துகொண்டான். எந்த நாளில் ஈசாக்கு பெயெர்செபாவுக்குக் குடிபெயர்ந்தானோ அந்த நாளின் இரவிலேயே கர்த்தர் தரிசனமாகி அவனுடன் பேசினார்.…

Genesis

கர்த்தரின் சித்தத்தில் இருத்தல்

(வேதபகுதி: ஆதியாகமம் 26:1-22) “ஈசாக்கு கேராரிலே குடியிருந்தான்” (வச. 6). ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்துக்குப்பின் நூறு ஆண்டுகள் கழித்து ஈசாக்கின் நாட்களிலும் ஒரு பஞ்சம் ஏற்பட்டது. ஈசாக்கு இதனால் பாதிக்கப்பட்டான். விசுவாசிகள் இயற்கைச் சீற்றங்களுக்கும், பேரழிவுகளுக்கும், கொரோனோ போன்ற பெருந்தொற்றுக் காலங்களுக்கும் விதிவிலக்கானவர்கள் அல்லர். எல்லாரையும் போலவே அவர்களும் அவற்றை எதிர்கொள்ள வேண்டும். விசுவாசிகளுக்குத் தேவன் யாவற்றையும் நன்மைக்கு ஏதுவாக முடியப்பண்ணுகிறார். பஞ்சத்தின் ஊடாகவும் தேவன் விசுவாசிகளைக் காப்பாற்ற வல்லவர். “கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி” நீ…

Genesis

ஜெபத்தின் மேன்மை

(வேதபகுதி: ஆதியாகமம் 25:19-34) “மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்” (வச. 21). ஈசாக்கு தேவனுடைய வல்லமையாலும் வாக்குறுதியாலும் பிறந்தவன். அவனுடைய திருமணம் தேவனுடைய திட்டத்தின்படி நடந்தது. திருமணம் ஆகி இருபது ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. அவனுடைய ஒன்றுவிட்ட சகோதரன் இஸ்மவேலுக்கோ பன்னிரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டார்கள். தேவனுடைய பிள்ளைகளைக் காட்டிலும் உலகத்தாரின் ஆசீர்வாதத்தைக் காணும்போது நமக்கும் சில நேரங்களில் மனச்சோர்வு உண்டாகிறது. “துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில்,…

Genesis

சகல மக்களுக்கும் ஆசீர்வாதம்

(வேதபகுதி: ஆதியாகமம் 25:1-18) “ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம். பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும் முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன்போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்” (வச. 7,8). இந்த அதிகாரம் ஆபிரகாமின் மூன்று குடும்பங்களைப் பற்றிப் பேசுகிறது. கேத்தூராளின் குடும்பம் (வச. 1-4), ஆகாரின் குடும்பம் (வச. 12-17) மற்றும் சாராளுக்குப் பிறந்த ஈசாக்கின் குடும்பம் (வச. 19-34). இவர்கள் அனைவரும் ஆபிரகாமின் மூலமாக ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். ஆயினும் ஈசாக்கே நம்முடைய கவனத்தை…

Genesis

ரெபெக்காளின் தீர்மானம்

(வேதபகுதி: ஆதியாகமம் 24:28-67) “ரெபெக்காளை அழைத்து: நீ இந்த மனிதனோடுகூடப் போகிறாயா என்று கேட்டார்கள்; அவள்: போகிறேன் என்றாள்” (வச. 58). ரெபெக்காள் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய தீர்மானத்தை எடுத்தாள். அவள் விசுவாசத்துடன் அந்த மனிதனின் பேச்சை நம்பி, இதுவரை ஒருமுறை கூட பார்த்திராத ஈசாக்குடன் வாழ்வதற்குப் போக வேண்டும் இல்லையேல் தன் வீட்டிலே இருக்க வேண்டும். தன்னுடைய தாய் மற்றும் சகோதரன் மூலமாக ஒரு தடை அவளுக்கு வந்தது: “பத்து நாளாகிலும் பெண் எங்களோடிருக்கட்டும்,…

Genesis

பெண் பார்க்கும் படலம்

(வேதபகுதி: ஆதியாகமம் 24:1-27) “நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனாகிய ஈசாக்குக்குப் பெண் கொள்வேன் என்று, வானத்துக்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடுக்கும்படிக்கு, நீ உன் கையை என் தொடையின்கீழ் வை என்றான்” (வச. 4). ஒரு விசுவாசமுள்ள தந்தை தன்னுடைய நேசகுமரானுக்கு ஒரு வாழ்க்கைத் துணையை ஏற்பாடு செய்யும் நிகழ்வு இது. தன் மகன் மூலமாக தன்னுடைய குடும்பமும், சந்ததியும் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமானால் அவனுக்கு ஒரு துணை அவசியம்…

Genesis

துக்கத்திலிருந்து வெளியே வருதல்

(வேதபகுதி: ஆதியாகமம் 23:1-20) “கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கீரியாத் அர்பாவிலே சாராள் மரித்தாள்; அப்பொழுது ஆபிரகாம் வந்து, சாராளுக்காகப் புலம்பி அழுதான்” (வச. 2). ஆபிரகாம் விசுவாசத் தந்தை என்றால், சாராள் ஒரு விசுவாசத் தாய். வேதாகமத்தில் வயதையும் மரணத்தையும் பற்றி பதிவு செய்யப்பட்டுள்ள ஒரே பெண் இவள் மட்டும்தான். எத்தனை பெரிய விசுவாசியாக இருந்தாலும் கர்த்தருடைய வருகை தாமதிக்குமானால் நாமும் ஒருநாள் மரித்தே ஆக வேண்டும். சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி கீழ்ப்படிந்திருந்தாள்.…

Genesis

தேவனிடமிருந்து திரும்பப் பெறுதல்

(வேதபகுதி: ஆதியாகமம் 22:15-24) “நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.” (வச. 18). ஆபிரகாம் தன் மகனை தேவன் சொன்னபடி பலியிடச் சென்றான். மரித்தோரிலிருந்து அவனைப் பாவனையாகத் திரும்பவும் உயிரோடு பெற்றுக்கொண்டான். என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து உன் நேசகுமாரனைப் பலியிட்டால் இன்ன இன்ன ஆசீர்வாதங்களைத் தருவேன் என்று தொடக்கத்திலேயே தேவன் அறிவிக்கவில்லை. அவன் அதிகாலையில் எழுந்து பலிக்குத் தேவையானவற்றை ஆயத்தம்…

Genesis

கடினமான சோதனையை எதிர்கொள்ளுதல்

(வேதபகுதி: ஆதியாகமம் 22:1-14) “இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.” (வச. 1). “இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்.” அவனுடைய விசுவாசத்துக்கு வந்த சோதனை. ஆபிரகாம் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த சோதனைகள் எல்லாவற்றிலும், தன் நேசகுமாரனாகிய ஈசாக்கை மோரியா மலையில் பலியிடும்படி (வச. 2) சந்தித்த சோதனை மிகக் கடினமானது. ஆயினும் அவன் அதிகாலையில் எழுந்து பலிக்குத் தேவையான…

Genesis

ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை

(வேதபகுதி: ஆதியாகமம் 21:22-34) “ஆபிரகாம் பெலிஸ்தருடைய தேசத்திலே அநேக நாள் தங்கியிருந்தான்” (வச. 34). நாம் பிரச்சினைகளும் நெருக்கங்களும் நிறைந்திருக்கிற காலகட்டத்தில் நம்முடைய சாட்சியைக் காத்துக்கொள்வதைக் காட்டிலும் சமாதானமுள்ள காலகட்டத்தில் சாட்சியைக் காத்துக்கொள்வது இன்றியமையாதது. மக்கள் எப்பொழுதும் நம்மை உற்றுக் கவனிக்கிறார்கள். “நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்” (வச. 22) என ஆபிரகாம் சாட்சியைப் பெற்றதுபோல, நம்முடைய சாட்சியும் இருக்க வேண்டியது அவசியம். ஆபிரகாமுடைய விசுவாச வாழ்க்கையும், அவனுடைய தனித்துவமான வாழ்க்கை முறையும்…