தொழுகையின் முக்கியத்துவம்
(வேதபகுதி: ஆதியாகமம் 26:23-35) “நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்” (வச. 28). ஈசாக்கு ரெகொபோத்திலிருந்து தன்னுடைய தந்தை ஆபிரகாம் கர்த்தரைத் தொழுதுகொண்ட இடமாகிய பெயெர்செபாவுக்குக் குடிபெயர்ந்தான். கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட மக்களின் அடுத்த நகர்வு அவரைத் தொழுதுகொள்வதாக இருக்க வேண்டும். ஈசாக்கின் எண்ணங்களைக் கர்த்தர் அறிந்துகொண்டார். உலக மக்களிடமிருந்து பாதுகாப்பு கர்த்தரின் கரத்திலேயே இருக்கிறது என்பதை ஈசாக்கும் அறிந்துகொண்டான். எந்த நாளில் ஈசாக்கு பெயெர்செபாவுக்குக் குடிபெயர்ந்தானோ அந்த நாளின் இரவிலேயே கர்த்தர் தரிசனமாகி அவனுடன் பேசினார்.…