Genesis

தேவனிடமிருந்து திரும்பப் பெறுதல்

(வேதபகுதி: ஆதியாகமம் 22:15-24) “நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.” (வச. 18). ஆபிரகாம் தன் மகனை தேவன் சொன்னபடி பலியிடச் சென்றான். மரித்தோரிலிருந்து அவனைப் பாவனையாகத் திரும்பவும் உயிரோடு பெற்றுக்கொண்டான். என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து உன் நேசகுமாரனைப் பலியிட்டால் இன்ன இன்ன ஆசீர்வாதங்களைத் தருவேன் என்று தொடக்கத்திலேயே தேவன் அறிவிக்கவில்லை. அவன் அதிகாலையில் எழுந்து பலிக்குத் தேவையானவற்றை ஆயத்தம்…

Genesis

கடினமான சோதனையை எதிர்கொள்ளுதல்

(வேதபகுதி: ஆதியாகமம் 22:1-14) “இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.” (வச. 1). “இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்.” அவனுடைய விசுவாசத்துக்கு வந்த சோதனை. ஆபிரகாம் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த சோதனைகள் எல்லாவற்றிலும், தன் நேசகுமாரனாகிய ஈசாக்கை மோரியா மலையில் பலியிடும்படி (வச. 2) சந்தித்த சோதனை மிகக் கடினமானது. ஆயினும் அவன் அதிகாலையில் எழுந்து பலிக்குத் தேவையான…

Genesis

ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை

(வேதபகுதி: ஆதியாகமம் 21:22-34) “ஆபிரகாம் பெலிஸ்தருடைய தேசத்திலே அநேக நாள் தங்கியிருந்தான்” (வச. 34). நாம் பிரச்சினைகளும் நெருக்கங்களும் நிறைந்திருக்கிற காலகட்டத்தில் நம்முடைய சாட்சியைக் காத்துக்கொள்வதைக் காட்டிலும் சமாதானமுள்ள காலகட்டத்தில் சாட்சியைக் காத்துக்கொள்வது இன்றியமையாதது. மக்கள் எப்பொழுதும் நம்மை உற்றுக் கவனிக்கிறார்கள். “நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்” (வச. 22) என ஆபிரகாம் சாட்சியைப் பெற்றதுபோல, நம்முடைய சாட்சியும் இருக்க வேண்டியது அவசியம். ஆபிரகாமுடைய விசுவாச வாழ்க்கையும், அவனுடைய தனித்துவமான வாழ்க்கை முறையும்…

Genesis

இஸ்மவேலின் வெளியேற்றம்

(வேதபகுதி: ஆதியாகமம் 21:9-21) “இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றாள்” (வச. 10). ஆபிரகாம், சாராள்-ஈசாக்கு, ஆகார்-இஸ்மவேல் ஆகியோரின் கதை ஒரு குடும்பத்தில் நடக்கும் பிரச்சினை மட்டுமல்ல, அது கிறிஸ்தவ ஜீவியத்தில் ஆவிக்கும் மாம்சத்துக்கும் நடக்கும் போராட்டமாக புதிய ஏற்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ளது. இஸ்மவேல் மாம்சத்தின்படி பிறந்தவனுக்கு அடையாளமாயிருக்கிறான். ஈசாக்கோ ஆவியின்படி பிறந்தவனுக்கு அடையாளமாயிருக்கிறான். எப்பொழுது ஈசாக்கு பிறந்து சுதந்தரவாளியாக அறிவிக்கப்பட்டானோ, அதாவது ஆபிரகாம் பெரிய…

Genesis

ஓர் அற்புதமான பிறப்பு

(வேதபகுதி: ஆதியாகமம் 21:1-8)  “கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்” (வச. 1). “கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்” (வச. 1). தேவன் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு எப்பொழுதும் உண்மையுள்ளவராக இருக்கிறார். தேவன் உண்மையுள்ளவராக இருப்பது மட்டுமின்றி, அற்புதங்களின் தேவனாகவும் இருக்கிறார். கருத்தரிப்பு ஓர் அற்புதம். கருவுற்ற காலம் ஓர் அற்புதம். தொன்னூறு வயதுடைய பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததும் ஓர் அற்புதம். குழந்தைக்கு உணவளித்ததும் ஓர் அற்புதம்.…

Genesis

சாகாத பழைய சுபாவம்

(வேதபகுதி: ஆதியாகமம் 20:1-18) “அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான்” (வச. 2). பல நேரங்களில் விசுவாசிகளுக்குப் பொய் என்பது ஒரு பாவமாகவே தெரிவதில்லை. ஒரு நல்லது நடப்பதற்கு ஒரு பொய் சொன்னால் பராவாயில்லை என்ற உலகீய மனோபாவம் விசுவாசிகளையும் பற்றிக்கொண்டிருப்பது துக்கமான காரியமே! ஒரு பொய் தன்னைக் காப்பாற்றும் என்று ஆபிரகாம் நினைத்தான். அந்தப் பொய்க்குச் சாக்குப்போக்கு சொல்வதும் விசுவாசிக்கு…

Genesis

உலக விரும்பியின் முடிவு

(வேதபகுதி: ஆதியாகமம் 19:1-38) “லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான்” (வச. 1). லோத்து, முதலாவது யோர்தானின் நீர் நிறைந்த சமவெளியைத் கண்டு தெரிந்துகொண்டான் (13;10), பின்பு சோதோமுக்கு நேராகக் கூடாரம் போட்டான் (13;12), பின்பு சோதோமில் குடியேறினான் (14:12), இப்பொழுது சோதோமின் பட்டணத்து அதிகாரியாக அமர்ந்திருக்கிறான் (வச. 1). “நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக் கிரியைகளைக் கண்டு, கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்து” (2 பேதுரு 2:7) என்ற பேதுருவின் வார்த்தைகள் இந்த உலகத்தாருடைய…

Genesis

பரிந்துரை ஜெபவீரன்

(வேதபகுதி: ஆதியாகமம் 18:16-22) “ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான்” (வச. 22). ஆபிரகாம் லோத்தை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக ஒருமுறை போர் செய்தார். கர்த்தருடைய கோபம் சோதோம் கொமோராவின்மீது ஏற்பட்டபோது, இப்பொழுது அவனுடைய மனம் லோத்துவுக்காகத் துடித்தது. லோத்து இரட்சிக்கப்பட்டவன்தான் என்பதில் ஆபிரகாமுக்கு எவ்விதச் சந்தேகமுமில்லை. அவன் நீதிமான் என்பதை அறிந்திருந்தான். அவனுக்காக ஆபிரகாம் ஆண்டவரிடத்தில் ஜெபத்தில் போரிட்டான். தன்னை விட்டுப் பிரிந்து, தவறான வழியைத் தெரிந்தெடுத்து, உலகத்தை நாடிப்போன ஒரு விசுவாசிக்காகப் பரிந்துபேச யார்தான் முன்வருவார்கள்?…

Genesis

கர்த்தரால் எல்லாம் கூடும்

(வேதபகுதி: ஆதியாகமம் 18:9-15) “கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவ காலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்” (வச. 14). சாராளின் நகைப்பு சற்று அவிசுவாசம் கொண்டதுபோல் நமக்குத் தோன்றினாலும், “விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவரெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயது சென்றவளாயிருந்ததும் பிள்ளை பெற்றாள்” (எபி. 11:11) என்று அவளுடைய விசுவாசத்தின் சிறப்பை எபிரெயர் நிருபம் வலியுறுத்துகிறது. பின்னர் ஏன் சாராள் நகைத்தாள்? தன்னுடைய நிலையையும் தன் கணவனின்…

Genesis

தொழுதுகொள்ளும் வாழ்க்கை

(வேதபகுதி: ஆதியாகமம் 18:1-8) “தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைமட்டும் குனிந்து…” (வச. 2). ஆபிரகாம் தன் இல்லத்தைத் தேடிவந்த பரலோகப் பார்வையாளர்களை ஏற்றுக்கொண்டு உபசரித்தது நிச்சயமாகவே நமக்கு ஒரு முன்மாதிரியான செயல். அந்நியர்களை உபசரித்ததன் வாயிலாக, அவன் தேவதூதர்களுக்கு மட்டுமல்ல கர்த்தருக்கே பணிவிடை செய்யும் பாக்கியத்தைப் பெற்றான். விருத்தசேதனத்தின் வாயிலாகக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட வாழ்க்கையானது அவரைப் பணிந்துகொள்வதற்கும்…