Genesis

விருத்தசேதனம் பண்ணப்பட்ட வாழ்க்கை

(வேதபகுதி: ஆதியாகமம் 17:9-27) “… என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண் பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும்” (வச. 10). விருத்தசேதனம் என்பது தேவனுடைய உடன்படிக்கையின் அடையாளத்தை உடலில் உண்டாக்குவது. இது கர்த்தரின் கர்த்தத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்கான அடையாளம். இதை ஆபிரகாமும் அவனுடைய குடிவழியினரும் என்றென்றைக்கும் செய்துகொள்ள வேண்டும்.நாங்கள் தேவனுக்குச் சொந்தமானவர்கள் என்பதை வெளிப்படுத்தும் அடையாளமாக இது இருக்கிறது. பிற தேசங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி கர்த்தர் அவர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்த விரும்பினார். பிற நாடுகள்…

Genesis

புதிய பெயரும் புதிய பொறுப்பும்

(வேதபகுதி: ஆதியாகமம் 17:1-8) “ஆபிராம் தொன்னூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு”… என்றார் (வச. 1). பதின்மூன்று ஆண்டுகள் மௌனத்திற்குப் பிறகு, தேவன் ஆபிராமுக்கு, “நான் சர்வ வல்லமையுள்ள தேவன்” என்னும் புதிய பெயரில் அவனுக்குத் தரினமானார். இதற்கு, “எல் ஷடாய்” அதாவது எல்லாவற்றையும் செய்வதற்கு வல்லமையுள்ள போதுமான தேவன் என்று பொருள். அதாவது நான் உனக்கு என்ன செய்ய வேண்டும், எப்பபடிச் செய்ய…

Genesis

விசுவாசமும் பொறுமையும்

(வேதபகுதி: ஆதியாகமம் 16:1-16) “அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன் நாச்சியாரைண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றாள் ” (வச. 9). வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ள வேண்டும் (எபி. 6:11). விசுவாசிக்கிறவன் பதறான் என்று ஏசாயா தீர்க்கதரிசி திட்டவட்டமாக அறிவிக்கிறார் (ஏசா. 28:16). தேவனுடைய திட்டத்துக்காக மட்டுமல்ல, அவருடைய வேளைக்காகவும் நாம் காத்திருக்க வேண்டும். என்னுடைய சரீரம் செத்துப்போயிற்று என்று ஆபிராமும், என்னுடைய சரீரம் பெலவீனமடைந்துவிட்டது என்று சாராளும் எண்ணுமளவுக்கு தேவன்…

Genesis

அழுகையும் களிப்பும்

(வேதபகுதி: ஆதியாகமம் 15:7-21) “சூரியன் அஸ்தமித்துக் காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜுவாலையும் தோன்றின.” (வச. 17). இந்தப் பகுதி இஸ்ரயேல் தேசத்தின் முழு வரலாற்றையும் மட்டுமின்றி, நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் முழுக் கதையையும் சுருக்கமாகச் சொல்கிறது எனலாம். புகைகிற சூளை மற்றும் அக்கினிச் ஜுவாலை; அதாவது நம்மைத் துன்பப்படுத்தும் சூளை போன்ற பாடுகள் மற்றும் அதிலிருந்து வெளியே வருவதற்கு அக்கினிஜுவாலை போன்ற விடுதலையின் வெளிச்சம். இது துன்பத்தைத் தொடர்ந்து…

Genesis

விசுவாசத்தால் நீதிமானாகுதல்

(வேதபகுதி: ஆதியாகமம் 15:1-6) “அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் நீதியாக எண்ணினார்” (வச. 6). ஆபிராம், சோதோமின் அரசன் தந்த வாய்ப்பை நிராகரித்தான், ஆயினும் அவன் எதையும் இழந்துபோகவில்லை. கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி, “நீ பயப்படாதே, நான் உனக்குக் கேடகமும், மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்” என்றார். அதாவது சோதோமின் ராஜாவைப் போல பொருட்களைத் தருவேன் என்று கூறாமல் கர்த்தர்தாமே பரிசாக இருப்பேன் என்று கூறினார். நாம் உலகம் தரும் அநித்தியமான வாய்ப்புகளைப் புறக்கணிக்கும்போது, அது நம்மைப்…

Genesis

வெற்றியின் ஆபத்து

(வேதபகுதி: ஆதியாகமம் 14:17-24) “… ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன்.” (வச. 22). “போருக்குமுன் கொள்ளவேண்டிய எச்சரிக்கையைக் காட்டிலும், பெற்றிக்குப் பின்னர் நமக்கு அதிக எச்சரிக்கை அவசியம்” என்று திருவாளர் ஆன்ட்ரு போனார் கூறினார். வெற்றிக்குப் பின் ஏற்படும் சோதனையே அநேகரைத் தோல்வியடையச் செய்திருக்கிறது. இங்கே மேலோட்டமாகப் பார்த்தால், சோதோமின் ராஜா ஆபிராமுக்கு அளித்த வெகுமதி நியாயமானதாவும் சரியானதாகவும் தெரிகிறது. ஆபிராம் தனது…

Genesis

ஆபிராம்: ஆபத்தில் உதவும் சகோதரன்

(வேதபகுதி: ஆதியாகமம் 14:1-16) “… தன் சகோதரனாகிய லோத்தையும், அவனுடைய பொருள்களையும், ஸ்திரீகளையும், ஜனங்களையும் திருப்பிக் கொண்டுவந்தான் ” (வச. 16). ஆபிராம் விசுவாசித்து நடந்தான், லோத்து தரிசித்து நடந்தான். இது அவனை யோர்தானின் சமவெளிக்கு நேராகவும், பின்பு சோதோமுக்கு நேராகவும் நடத்தியது. லோத்து ஒரு நீதிமான் தான். அதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. ஆனால் அவர் தனக்குத் தொடர்பில்லாத இடத்துக்குச் சென்றதன் விளைவாக சோதோமின் மக்களுடன் சிறைப்பிடிக்கப்படுகிறார். அங்கே அவன் ஒரு விசுவாசியாக வாழமுடியாமலும், ஒரு அவிசுவாசியைப்…

Genesis

இரண்டு தெரிந்தெடுப்புகள்

(வேதபகுதி: ஆதியாகமம் 13:5-18) “அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான்… கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப் பார்” (வச. 10,14). லோத்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தான். தன் கண்களுக்குப் பிரியமானதையும் பசுமையாகத் தெரியக்கூடியதையும் தனக்காகத் தெரிந்தெடுத்தான். லோத்தின் பார்வைக்கு யோர்தான் ஆற்றின் அருகான சமபூமி, தனக்கும் தன்னுடைய கால்நடைகளுக்கும்…

Genesis

எகிப்திலிருந்து திரும்புதல்

(வேதபகுதி: ஆதியாகமம் 13:1-4) “அவன் தன் பிரயாணங்களிலே தெற்கேயிருந்து பெத்தேல் மட்டும், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவாகத் தான் முன்பு கூடாரம்போட்டதும், தான் முதல்முதல் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான ஸ்தலமட்டும் போனான்; அங்கே ஆபிராம் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்” (வச. 3-4). ஆபிராமுக்கு எகிப்திய அனுபவம் ஒரு சோகக் கதை. அவனுடைய விசுவாச வாழ்வில் ஏற்பட்ட சறுக்கல். எகிப்தில் அவனுக்கு கூடாரமோ பலிபீடமோ இல்லை. அதாவது, எகிப்தில் வாழ்வோருக்கு இங்கே நாம் நிரந்தரமற்றவர்கள், நாம் மோட்சத்தை நோக்கிப் பயணிக்கிறோம்…

Genesis

கடினச் சூழலில் விசுவாசத்தைக் காத்தல்

(வேதபகுதி: ஆதியாகமம் 12:10-20) “அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான்” (வச. 10). கர்த்தரால் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட கானான் நாட்டில் பஞ்சம் ஏற்படுமா? அங்கு தங்கியிருக்கும்போது குறைவுகள் ஏற்படுமா? ஆம் என்று இந்த வேதபகுதி நமக்குக் கூறுகிறது. இவ்விதச் சூழ்நிலைகளை நாம் எவ்விதம் எதிர்கொள்கிறோம், எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதைக் கர்த்தர் காண விரும்புகிறார். இங்கு ஆபிராம் கர்த்தரிடம் ஆலோசனை கேட்டது பற்றியோ, எகிப்துக்குச் செல்லப்போகிறேன் அது உம்முடைய…