Genesis

வாக்குத்தத்த பூமியில் நடத்தல்

(ஆதியாகமம் 12:4-9) “ஆபிராம் அந்தத் தேசத்தில் சுற்றித் திரிந்து சீகேம் என்னும் இடத்துக்குச் சமீபமான மோரே என்னும் சமபூமி வந்தான்; அக்காலத்திலே கானானியர் அத்தேசத்தில் இருந்தார்கள்” (வச. 6). ஆபிராம் கானான் நாட்டுக்குள் நுழைந்தான், அங்கு சுற்றித் திரிந்தான். அவன் அங்கு சுற்றித்திரிந்த இடங்கள், அவன் செய்த செயல்கள் நமக்குப் பல நல்ல ஆவிக்குரிய படிப்பினையை வழங்குகின்றன. கானான் நாட்டுக்குள் ஆபிராமின் பயண அனுபவங்களில் நமக்கு முதன் முதலில் சொல்லப்பட்ட காரியம், அவன் சீகேம் என்னும் இடத்திற்குச்…

Genesis

ஆபிரகாமுக்கு உண்டான தேவகட்டளை

(வேதபகுதி: ஆதியாகமம் 12:1-3) “கர்த்தர் ஆபிராமை நோக்கி; நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ” (வச. 1). ஆதியாகமம் ஆரம்பங்களின் புத்தகம். மனித இனத்தின் தோற்றம் ஆதாமிலிருந்து தொடங்கியது. பெருவெள்ளத்துக்குப் பின் புதிய ஆரம்பம் நோவாலிருந்து தொடங்கியது. ஒரு புதிய நாட்டுக்கான தோற்றம் ஆபிராம் என்ற மனிதலிருந்து தொடங்குகிறது. தேவன் அவரை ஊர் என்ற கல்தேய தேசத்தில் சந்தித்தார். இதுவே அவருடைய வாழ்க்கையின்…

Genesis

தேவனின் தெரிந்தெடுப்பு

(வேதபகுதி: ஆதியாகமம் 11:10-32) “தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், … அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தைவிட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டுடான்; அவர்கள் ஆரான் மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்” (வச. 31). ஆதியாகமப் புத்தகத்தில் இதுவரை சொல்லப்பட்ட வம்சாவழிப் பட்டியலிலிருந்து இந்த பட்டியலின் வேறுபட்ட அம்சம் என்னவென்றால், மனிதர்களுடைய வாழ்நாட்களின் ஆண்டுகள் வேகமாக குறைந்து வருவதுதான். பெருவெள்ளத்துக்குப் பின் வாழ்ந்தோரின் சராசரி ஆயுட்காலம் படிப்படியாகக் குறைந்துவிட்டது. மனிதனின் வீழ்ச்சி, காலநிலை மாற்றங்கள் போன்றவற்றின்…

Genesis

தேவனின் தலையீடு

(வேதபகுதி: ஆதியாகமம் 11:1-9) “அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத் தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்” (வச. 6). மனிதர்கள் கட்டடக் கலையில் தேர்ச்சி பெற்றார்கள். வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தைக் கட்டத் தொடங்கினார்கள். ஆனால் கர்த்தர் இறங்கி, அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்கி, மனிதர்களுடைய எண்ணத்தைத் தடுத்தார். மக்கள் சிதறிபோனார்கள், பல்வேறு மொழிகள் உண்டாயின.…

Genesis

புதிய உலகத்தின் மக்கள்

(வேதபகுதி: ஆதியாகமம் 10:1-32) “நோவாவின் குமாரராகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களின் வம்ச வரலாறு; ஜலப்பிரளயத்துக்குப் பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள்” (வச. 1). புதிய உலகத்தின் மனித இனத்தோற்றத்தின் வரலாற்றை இப்பகுதியில் படிக்கிறோம். நோவாவின் குமாரராகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களின் வரலாறு. இவர்களில் யாப்பேத் மூத்தவன் (வச. 21). ஆனால் ஆவியானவர் இங்கு சேமின் பெயரை முதலாவது குறிப்பிடுகிறார். இந்தச் சேமின் இனத்தில்தான் ஆபிரகாமும், தாவீதும், இயேசு கிறிஸ்துவும் தோன்றினார்கள். நாமும்கூட எந்த இனத்தாராகவும்…

Genesis

நன்றி கூறுதலின் சுகந்த வாசனை

(வேதபகுதி: ஆதியாகமம் 8:1-22) “சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர் இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; … நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.” (வச. 21). நோவா பேழையை விட்டு வெளியேறிய பிறகு முதலாவது செய்த காரியம் கர்த்தருக்கு நன்றி செலுத்தியதாகும். இந்த மனிதனுக்கு தேவனைக் கனப்படுத்துவது என்றால் என்ன என்பது நன்றாகத் தெரியும். சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு அவற்றைப் பலியிட்டு…

Genesis

அழிவிலிருந்து பாதுகாப்பு

(வேதபகுதி: ஆதியாகமம் 7:1-24) “மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின; நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன” (வச. 23). தேவ கோபத்தின் விளைவு ஒரு பெருவெள்ளத்தில் முடிந்தது. நாற்பது நாள் இடைவிடாத மழை. பூமியின் ஊற்றுக் கண்களும், வானத்தின் மதகுகளும் திறந்து நீரைக் கொட்டித் தீர்த்தன. சகல உயிரினங்களும் அழிந்து போயின. 2015 -இல் மூன்று…

Genesis

தேவனின் உடன்படிக்கை

(வேதபகுதி: ஆதியாகமம் 6:13-22) “ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும், உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசியுங்கள்” (வச. 18). தேவன் நோவாவை நீ ஒரு பேழையை உண்டுபண்ணி அதற்குள் செல்லுங்கள் என்று கட்டளையிட்டார். நோவா தேவனில் எந்த அளவுக்கு நம்பிக்கை கொண்டிருந்தான் என்பதற்கு அவன் உண்டுபண்ணிய இந்தப் பேழை அடையாளமாயிருக்கிறது. மழை பெய்யாத நாட்களில், வெள்ளத்தைக் கண்டிராத நாட்களில் விசுவாசத்தோடும் அதைச் செய்து முடித்தான். தேவன்மேல் வைக்கிற…

Genesis

தேவனின் மனஸ்தாபமும் கிருபையும்

(வேதபகுதி: ஆதியாகமம் 6:1-12) “நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது” (வச. 8). வீழ்ந்துபோன மனித குலம் எப்போதும் தேவனுக்கு விரோதமாகவே சிந்திக்கிறது, செயல்படுகிறது. தேவன் ஆசையாய்ப் படைத்த இப்பூமியில் அவரால் உண்டாக்கப்பட்டவர்கள் தங்கள் தங்கள் ஆசையின்படியே நடந்துகொண்டார்கள். எனவே “கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்” (வச. 6). தேவனுடைய செயல்கள் எப்போதும் அன்பு நிறைந்ததாகவே இருக்கும். ஒரு நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பதுபோல, அன்பும் கோபமும் தேவனுடைய இரு குணங்கள். குறுகிய எல்லையையும் அறிவாற்றலையும் பெற்றிருக்கிற நமக்கு இது…

Genesis

ஆதாமின் வம்சவரலாறு

(வேதபகுதி: ஆதியாகமம் 5:1-32) “ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான்” (வச. 5). “விசுவாசத்தின் தங்க இழை” என்று அழைக்கப்படுகிற தேவபக்தியுள்ள சந்ததியின், சுருக்கமான வரலாற்றை இந்தப் பகுதி நமக்கு அறிவிக்கிறது. வீழ்ச்சிக்குப் பிறகு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட “ஸ்திரீயின் வித்தாகிய” மேசியாவின் குடிவழிப்பட்டியல் இது. காயீனின் சந்ததியில் சொல்லப்பட்டுள்ளதுபோல, இவர்கள் இந்த உலக முன்னேற்றுத்துக்கோ, சமுதாயப் புரட்சிக்கோ ஏதும் செய்யவில்லை. மாறாக, ஆங்காங்கே அத்திபூத்தாற்போல் இவர்களுடைய விசுவாசச் செயல்கள் மட்டும் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது.…