யூலை 11
யூலை 11 அவன் இருதயத்தை உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக் கண்டு,…. நிறைவேற்றினீர் (நெகே.9:8). தேவனுடைய சிநேகிதன் என்கிற பெயரைக் காட்டிலும் ஆபிரகாமுக்கு வேறு சிறந்த பட்டம் தேவையா? (யாக்.2:23). தேவனுடைய ஐக்கியம் தேவை என்று உணர்ந்து வரும் எந்த மனிதனையும் அவர் தனது சிநேகிதனாக ஏற்றுக்கொள்வார் என்று அவனுக்குப் போதித்தவர் யார்? கல்தேயர் தேசத்து ஊர் பட்டணத்தைச் சேர்ந்த அந்த மனிதன் இவ்வளவு பெரிய சிறப்பைப் பெற காரணம் யாது? தேவன் அவன் இருதயத்தை உண்மையுள்ளதாகக் கண்டார்.…