August

தாழ்மையின் சிகரம்

2023 ஓகஸ்ட் 23 (வேத பகுதி: 1 சாமுவேல் 9,18 முதல் 27 வரை) “மூன்று நாளைக்கு முன்னே காணாமற்போன கழுதைகளைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்; அவைகள் அகப்பட்டது” (வசனம் 20). சவுல் சாமுவேலைத் தேடிப்போனான், சாமுவேலோ சவுலின் வரவுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். சவுல் இதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். இதுவரை பார்த்திராத ஒரு தீர்க்கதரிசியைத் தேடிச் சென்றான், யார் அந்தத் தீர்க்கதரிசியோ அந்த தீர்க்கதரிசியிடமே அவருடைய வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டான். அதுமட்டுமின்றி, தன்னுடைய காணாமற்போன கழுதைகளைக்…

August

செவிகொடுப்போம்

2023 ஓகஸ்ட் 22 (வேத பகுதி: 1 சாமுவேல் 9,15 முதல் 17 வரை) “சவுல் வர ஒரு நாளுக்கு முன்னே கர்த்தர் சாமுவேலின் காதுகேட்க … வெளிப்படுத்தியிருந்தார் ” (வசனம் 14 முதல் 15). சவுலைக் காண்பதற்கு முந்தைய நாளே கர்த்தர் சாமுவேலின் காதில் தன்னுடைய விருப்பத்தையும் செய்ய வேண்டிய காரியத்தையும் சொன்னார். சவுலுக்கும் கர்த்தருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த உறவும் இல்லை. அவர் அவனிடம் காணாமல் போன கழுதைகள் மூலம் பேசினார். ஆனால் சாமுவேல்…

August

சிறிய கதாபாத்திரங்கள்

2023 ஓகஸ்ட் 21 (வேத பகுதி: 1 சாமுவேல் 9,7 முதல் 14 வரை) “அவர்கள் பட்டணத்து மேட்டின் வழியாய் ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள்” (வசனம் 11). சவுலும் அவனுடைய வேலைக்காரனும் கர்த்தருடைய மனிதனைக் காண வேண்டும் என்று முடிவு எடுத்தபோது, அதற்கான வழிகளும் ஆச்சரியமான விதத்தில் திறக்கப்பட்டன. “தேவனுடைய மனுஷனாகிய அவருக்குக் கொண்டு போகத்தக்க காணிக்கை நம்மிடத்தில் ஒன்றும் இல்லையே” என்று சவுல் கைவிரித்தபோது,…

August

நற்சாட்சியுள்ள மனிதர்கள்

2023 ஓகஸ்ட் 20 (வேத பகுதி: 1 சாமுவேல் 9,5 முதல் 6 வரை) “இதோ, இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனுஷன் ஒருவர் இருக்கிறார்; … அவர் நாம் போகவேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான்” (வசனம் 6). காணாமற்போன கழுதைகளைக் குறித்த தேடல் சவுலுக்கு மனச்சோர்வை உண்டாக்கியது. “கழுதைகளின் மேலுள்ள கவலையை விட்டு, நமக்காகக் கவலைப்படாதபடிக்குத் திரும்பிப் போவோம் வா” (வசனம் 5) என்று சவுல் தன் வேலைக்காரனிடம் கூறினான். நம்முடைய தேடல் முடிவற்றதாகவும்,…

August

உணர்ந்து செயல்படுதல்

2023 ஓகஸ்ட் 19 (வேத பகுதி: 1 சாமுவேல் 9,3 முதல் 4 வரை) “சவுலின் தகப்பனாகிய கீசுடைய கழுதைகள் காணாமற்போயிற்று” (வசனம் 3). தேவனுடைய வழிகள் நம்முடைய ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை. அவர் தம்முடைய காரியங்களை நிறைவேற்ற இந்த வழியில்தான் செயல்படுவார் என்று நம்மால் ஊகிக்க முடியாதபடி செயல்படுகிறவர். மக்களுக்குப் பிரியமான ஒரு நபரை இஸ்ரவேல் நாட்டுக்கு அரசனாக்குவதற்காக அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவை சவுல் வீட்டில் இருந்த கழுதைகள். “சவுலின் தகப்பனாகிய கீசுடைய கழுதைகள் காணாமற்போயிற்று” (வசனம் 3)…

August

நடைமுறைச் சிக்கல்கள்

2023 ஓகஸ்ட் 18 (வேத பகுதி: 1 சாமுவேல் 9,1 முதல் 2 வரை) “அவனுக்குச் சவுல் என்னும் பேருள்ள சவுந்தரியமான வாலிபனாகிய ஒரு குமாரன் இருந்தான்; இஸ்ரவேல் புத்திரரில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான் இல்லை” (வசனம் 2). இஸ்ரவேல் வரலாற்றில், “ராஜாக்களின் யுகம்” என்னும் ஒரு புது யுகம் தொடங்குகிறது.  மக்கள் தங்களுடைய ராஜாவாக யாரைத் தெரிந்துகொள்வார்களோ, எப்படிப்பட்ட மனிதன் அவர்களுக்கு விருப்பமாயிருக்குமோ அத்தகையவராக சவுல் நமக்கு அறிமுகமாகிறார். அவர்கள் ஓர் ஆடம்பரமும், அழகும், பெருமையும், ஆளுமையும்…

August

நடைமுறைச் சிக்கல்கள்

2023 ஓகஸ்ட் 17 (வேத பகுதி: 1 சாமுவேல் 8,10 முதல் 22 வரை) “நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர் அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான்” (வசனம் 18). ஓர் அரசன் எங்களுக்கு வேண்டும் எனக் கேட்ட இஸ்ரவேலர்களிடம், அதனால் வரக்கூடிய சிக்கல்கள் என்னவென்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கர்த்தர் விரும்பினார். அவர்களுக்கு ஓர் அரசன் இருந்தால் பல சிக்கல்கள் தீரும் என்பது உண்மைதான். ஆனால் அதைவிடக் கூடுதலாக பல சிக்கல்களை…

August

கர்த்தருடைய எச்சரிப்பு

2023 ஓகஸ்ட் 16 (வேத பகுதி: 1 சாமுவேல் 8,9) “இப்போதும் … அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார்” (வசனம் 9). விசுவாசிகள் எப்பொழுதெல்லாம் தேவனின்மீது நம்பிக்கை வைக்கத் தவறுகிறார்களோ அப்பொழுதெல்லாம் அவருடைய உண்மையான ஊழியர்களையும் குறைசொல்வார்கள். இஸ்ரவேல் மக்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டது சாமுவேலுக்கு வருத்தத்தை உண்டுபண்ணியபோது கர்த்தர் அவனைத் தேற்றும்விதமாக, அவர்கள் முதலாவது என்னை நிராகரித்ததினாலேயே உன்னையும் நிராகரித்தார்கள் என்றார். இங்கே…

August

தவறான சுதந்தரத்துக்கு முயலுதல்

2023 ஓகஸ்ட் 15 (வேத பகுதி: 1 சாமுவேல் 8,6 முதல் 8 வரை) “அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: … அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்.” (வசனம் 7). பொதுவாக மனிதகுலம் நேரடியாக கடவுளுடைய கட்டுப்பாட்டில் இருப்பதை விரும்புகிறதில்லை. மாறாக, கண்ணுக்குத் தெரிகிற அரசாட்சிக்கும், அதிகாரத்துக்கும் கீழ்ப்படிந்து இருப்பதையே தெரிந்துகொள்கிறது. இஸ்ரவேல் மக்களும் இதற்கு விதிவிலக்கன்று. பிற நாடுகளைப் போல இல்லாமல், தேவனால் நேரடியாக ஆளப்படுகிற ஒரு தேசத்துக்கு இருக்கக்கூடிய…

August

வாரிசுப் பிரச்சினை

2023 ஓகஸ்ட் 14 (வேத பகுதி: 1 சாமுவேல் 8,1 முதல் 5 வரை) “அவனுடைய மூத்தகுமாரனுக்குப் பெயர் யோவேல், இளையவனுக்குப் பெயர் அபியா; அவர்கள் பெயெர்செபாவிலே நியாயாதிபதிகளாயிருந்தார்கள்” (வசனம் 2). சாமுவேல் முதிர் வயதானபோது தன் மகன்களை இஸ்ரவேலின் மீது நியாயாதிபதிகளாக ஏற்படுத்தினான். தனிப்பட்ட முறையில் சாமுவேல் ஒரு சிறந்த தேவனுடைய மனிதனாகவும் கறைபடாத கரத்துக்குச் சொந்தமானவனாகவும் விளங்கினான். கர்த்தருடனான உறவில் எந்தச் சூழ்நிலையிலும் விரிசல் விழாதவாறு காத்துக்கொண்டான். எல்லாக் காரியத்துக்காகவும் ஜெபித்து கர்த்தருடைய உத்தரவைப்…