நீதிசெய்வதில் தேவனைப் பிரதிபலித்தல்
(வேதபகுதி: உபாகமம் 19:14-21) “ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒரே சாட்சியினால் நியாயந்தீர்க்கக்கூடாது; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிலைவரப்படவேண்டும்.” (வச. 15). தேவனுடைய நியாயப்பிரமாணச் சட்டங்கள் அவருடைய இயல்பையும் குணநலனையும் பிரதிபலிக்கின்றன. ஒரு நீதியுள்ள நியாயாதிபதியாக, தேவன் தம்முடைய ராஜ்யத்தின் தன்மைகள் சரியான நீதியோடும் நியாயத்தோடும் இருக்க வேண்டுமென விரும்புகிறார். ஒரு நாள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய ராஜ்யத்தை பரிபூரண நீதியிலும் நேர்மையிலும் நிலைநிறுத்தும்படிக்கு பூமிக்கு திரும்புவார்…