வெற்றியின் ஆபத்து
(வேதபகுதி: ஆதியாகமம் 14:17-24) “… ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன்.” (வச. 22). “போருக்குமுன் கொள்ளவேண்டிய எச்சரிக்கையைக் காட்டிலும், பெற்றிக்குப் பின்னர் நமக்கு அதிக எச்சரிக்கை அவசியம்” என்று திருவாளர் ஆன்ட்ரு போனார் கூறினார். வெற்றிக்குப் பின் ஏற்படும் சோதனையே அநேகரைத் தோல்வியடையச் செய்திருக்கிறது. இங்கே மேலோட்டமாகப் பார்த்தால், சோதோமின் ராஜா ஆபிராமுக்கு அளித்த வெகுமதி நியாயமானதாவும் சரியானதாகவும் தெரிகிறது. ஆபிராம் தனது…