ஆத்துமாவினைத் தேற்றிடும் வார்த்தை
இயேசுவிடமே உண்டு
உனக்காறுதல் தன்னைத் தருகின்ற ஜீவன்
அவரிடம் தானே உண்டு
நேற்றும் இன்றும் மாறத் தேவனின்
வாக்குத் தத்தம் உண்டு… வேதத்தில்
காக்கும் வழியினைக் காட்டும் நல்ல
கட்டளை நிறைய உண்டு
உள்ளத்தைப் பரிசுத்தம் ஆக்கிடும்
உபதேசம் ஆயிரம் அங்கே உண்டு
உன்னதப் பாட்டுடன் பக்தனின் சங்கீதம்
வேதத்தில் தானே உண்டு
உலகத் தோற்றமும் முடிவையும் கூறிடும்
உண்மையில் தெளிவும் உண்டு
கிருபையுடன் வரும் கர்த்தரின் தரிசனம்
வார்த்தையில் தானே உண்டு