கர்த்தரின் வார்த்தையைக் கேட்பாயோ – உன்
கவனத்தை வேதத்தில் திருப்புவாயோ
நித்திய வாழ்வுக்கு வழிகாட்டும் குரலை
நிம்மதியுடன் கேட்பாயோ நீ
சித்தம் இரங்கியுன் சிறைமீட்க வந்தவர்
சிலுவையில் தொங்கிடும் காட்சியைப் பார்
சத்திய வழியும் ஜீவனும் நானே எனக்
கர்த்தர் அழைக்கிறார் சீக்கிரம் வா
உலகத்தில் உத்தமன் எவனுமில்லை நீ
உணர்ந்தால் போதும் எல்லோரும் பாவிதான்
கர்த்தரே நல்லவர் என்பதை ருசித்து
பார்த்திட நீயும் பறந்தே வா
எத்திசை போவேனென என்று நீ யோசித்து
தப்பிதம் செய்திடல் சாத்தியமோ
உன் பக்தியும் பூஜையும் பலிக்காது
உனையென்றும் பாவத்திலிருந்தே மீட்காது – என்
சத்திய நாதனின் சரீரத்தில் வடிகின்ற
இரத்தத்திற்கே அந்த மகிமையுண்டு
உத்தமனே என்னைக் கழுவியருழும் என்று அவர்
காலடி சென்று நீ கதறியழு.