ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவனைத் துதிப்பேன்
வீணையோடும் தாளத்தோடும் பாடல்கள் படிப்பேன்
நன்மை கிருபை அடைந்து நாளும் நாதனைத் துதிப்பேன்
நம்மை நடத்தும் நல்ல மேய்ப்பன் பாடலைப் படிப்பேன்
கர்த்தர் செய்யும் நன்மை கண்டு நாளுமே துதிப்பேன்
நம்மைக் காக்கும் வல்ல தேவன் பாடலைப் படிப்பேன்
தேவனே நீர் எனக்கு இரங்கும் என்று கூப்பிடுவேன்
தேடி வந்த தெய்வமவரை மகிமைப்படுத்திடுவேன்
ஞான வரத்தைத் தாருமென்றே நாதனைத் துதிப்பேன்
நாளும் நல்ல பாட்டெழுதி கீர்த்தனம் செய்வேன்
அன்பு கொண்ட உள்ளத்தோடு அவரைப் பாடிடுவேன்
என் ஆத்துமாவைத் தேற்றுமென்றே ஸ்தோத்திரம் செய்வேன்
உத்தமத்தில் நடந்து நாளும் துதிகள் செலுத்துவேன்
ஊழியத்துக்காக என்னை ஒப்புக் கொடுத்திடுவேன்