கர்த்தாவே உம்மை நான் துதிப்பேன் – இனி
காலமெல்லாம் உம் புகழை நான் பாடுவேன்
உமதற்புதங்கள் அதிசயங்கள் யாவற்றையும்
நான் விபரித்தே வீணையுடன் பாடலிசைப்பேன்
துதிகளிலே வாசம்செய்யும் தேவனே ! – உமது
நாமமதை கீர்த்தனமாய் தினமும் பாடுவேன்
என் ஆத்துமாவை உம்மிடத்தில் உயர்த்துகிறேன்
உமது பாதைகளை எனக்கு நீரே போதித்தருளும்
விண்ணப்பம் செய்ய வரும் வேளையிலே – என்
கன்மலையே கருணையுடன் கேட்டருள்வீரே
என்னப்பன் என்னய்யன் என்று தினமும் – நான்
இரக்கமுடன் இயேசு நாதா என்னறழைப்பேன்
என்னையென்றும் கைவிடாத தேவன் நீரே – உம்மை
நம்பி வந்தே காலடியில் சரணடைந்தேன்
எந்த வேளை இந்த ஏழை கூப்பிடும்போதும்
என் இடுக்கணுக்கு நீக்கலாக்கி மீடடுக்கொள்வீரே