உள்ளத்தின் ஆழத்தில் உத்தமர்
இயேசுவைக் கூப்பிடுவேன் – என்
எண்ணத்தைச் சொல்லிவிட – நல்ல
கர்த்தரைக் கூப்பிடுவேன்
கன்னத்தில் நீர் துடைக்க – அவர்
கரம் தன்னை நீட்டிக் கொள்வார்
என் முன்னுக்கு வந்து நின்றே – என்
எண்ணத்தைத் தீர்த்து வைப்பார்
மண்ணுக்குள் நான் உனக்காய்
வந்து மரித்திட்ட தேவன் என்றே – நீ
எண்ணிக்கொள் என்று சொல்லி
இளைப்பாறுதல் தந்திடுவார்
உலகை ஜெயித்தெழுந்தேன் – உன்னை
காத்திட ஜீவிக்கிறேன்
கண்ணுக்குள் நீர் எதற்கு – மகனே
கவலை எதற்கு என்பாய்
சத்தியம் நீ அறிவாய் – நித்திய
வாழ்வையும் நீ பெறுவாய்
இரட்சிப்பைத் தந்து உன்னை – என்
பிள்ளையாய் ஏற்பேன் என்பார்.