என் மீது பரிசுத்த இரத்தத்தின் துளிகள்
பட வேண்டும் இயேசு ஐயா! – என்
பாவமதைத் தீர்க்கும் நல்ல பரிகாரம்
அதைப் போல வேறோன்றும் இல்லை ஐயா
தகப்பனே! வேறொன்றும் இல்லை ஐயா
என் வாசல் படி மீது பொல்லாங்கள்
தினம் வந்து புரளுகிறான் தகப்பனே! – எனக்குப்
பொல்லாத நினைவு தந்து புறம்பாக்கி
உமைவிட்டுத் தள்ளாடவே வைக்கிறான்
தினமும் தள்ளாடவே வைக்கிறான்
ஐயா உம் அருளாலே அவன் அருகில்
நெருங்கிடாத ஆறுதலைத் தந்து விடும்
அடைக்கலத்தின் நாயகனே அன்பென்ற வேலியிட்டு
அவன் வரவைத் தடுத்துக்கொள்ளும்
என்னை அன்போடு அணைத்துக்கொள்ளும்
உறவுகளை உதறிவிட்டு உந்தனையே தெய்வமென்று
நம்பி வந்தேன் தகப்பனே – என்
நினைவுகளை நிறைவாக்கி நிலையான
ஆவி தந்து நிரப்பிவிடும் தெய்வமே
என்னை நீரே நிரப்பி விடும் தெய்வமே