இயேசுவைத் தேடிடுவாய் மனமே
இயேசுவைத் தேடிடுவாய்
பாவத்தின் பிடியினின்று உன்னை
மீட்டெடுக்கும் தேவன் – அந்த தூயனாம் இயேசு
ஆவியானவர் எங்கு உண்டோ – அங்கு
விடுதலை உனக்கு உண்டு
பாவியாகி நீ மரிப்பதினாலே
உனக்கென்ன சுகமுண்டு
ஒரே ஒருதரம் மரிப்பதும் – பின்பு
நியாயத்தீர்ப்பினை அடைவதுமே
மனிதனுக்கென்றே வேதத்தில்
நியமிக்கப்பட்டே இருப்பதையுணர்ந்து
இயேசுவின்றி ஒரு தெய்வத்தினாலும்
இரட்சிப்புக் கிடைக்காது
அவர் வார்த்தையை நம்பியே மனந்திரும்பு
மன்னிப்பு உனக்கு உண்டு