இயேசுவே !….
ஊழியத்துக்காய் என்னை ஒப்படைக்கின்றேன் – இனி
ஜீவிக்கின்ற நாட்கள் எல்லாம் உமது….
வாலிபத்தில் எந்தன் நாட்களெல்லாம் – ஒரு
கேலிக் கூத்தைப் போலே ஆகிவிட்டதே – உமது
ஜீவனுள்ள வார்த்தையினால் மீட்கப்பட்டதும் – என்
நெஞ்சமேல்லாம் உந்தனையே தேடுதய்யா…
எங்களுக்காய் பாவந்தனை சுமந்துகொண்டு – நீர்
பட்டதுயர் எந்நெஞ்சத்தையே வாட்டுதய்யா – இனிக்
கொஞ்ச நேரம் கூட வீணாக்கிடாமல் – உமது
சந்தோஷத்தை மக்களுக்கு இசைத்திடுவேன்…
எம்மையெல்லாம் மீட்டெடுத்த கன்மலையே – உம்மை
நன்றியுடன் ஸ்தோத்தரித்து துதித்திடுவோம்
தந்துவிடும் பரிசுத்த வல்லமையை – அந்தத்
தாலந்துகளால் உம்மை மகிமை செய்வோம்…