மே 11
மே 11 ….. தேவனோ…. அதை நன்மையாக முடியப்பண்ணினார் (ஆதி.50:20). இதே சத்தியத்தை நாம் ரோமர் 8:28ல் காணலாம். தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் என்பது நமக்குப் புதிதான வெளிப்பாடல்ல. இது புதிய ஏற்பாட்டுக் காலத்திற்குரியதல்ல. யோசேப்பின் இந்த அனுபவம் பழைய ஏற்பாட்டிலேயே மிகச் சிறந்தது எனலாம். தன் சகோதரர்களால் அவன் வெறுக்கப்பட்டான். பகைமையின் உச்சக்கட்டத்தில் அவனை அடிமையாக விற்றுப்போட்டனர். அடிமையாக இருந்த யோசேப்பு தொடர்ந்து அடிமையாகவே இராமல் அந்நாட்டின் அரியணைக்குச் செல்லும்…