யூன் 10
யூன் 10 எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப் பட்டதோ, அவன் பாக்கியவான் (சங்.32:1). இரட்டிப்பான துன்பத்திற்குப் பதிலாக இங்கு இரட்டிப்பான ஆசீர்வாதம் கூறப்பட்டுள்ளது. வேதாகமத்தில் மகிழ்ச்சியினை எடுத்துரைக்கும் தலைசிறந்த அதிகாரங்களில் இதுவும் ஒன்றாகும். இது தேவனுடைய மன்னிப்பில் ஆரம்பமாகிறது. நீதிமான்களின் ஆனந்த முழக்கத்துடன் முடிவடைகிறது. இவ்விரு உயர்ந்த நிலைகளுக்கும் இடையே துயரம் ஆழத்தில் மண்டிக்கிடக்கிறது. இப்படிப்பட்ட பள்ளத்தாக்கினைக் கடந்து சென்றால்தான் உயரமான இடத்தை அடையமுடியும். கிப்போவைச் சேர்ந்த அகஸ்டின் என்பவர் இச்சங்கீதத்தை அதிகமாக விரும்பினார்.…